செய்திகள் :

இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்; மகிழ்ச்சியில் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் - என்ன காரணம்?

post image

இந்தியா - இங்கிலாந்து பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 -ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை, கரூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி மேற்கொள்ளும் போது ஜவுளி வீட்டு உபயோகப் பொருட்களுக்கு எட்டு சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை இறக்குமதி சுங்கவரி விதிக்கப்பட்டு வந்தது. இந்தக் கூடுதல் சுங்கவரியால் கரூர் ஏற்றுமதியாளர்களின் மற்ற நாடுகளுடனான போட்டித் திறனை பாதித்ததோடு, இந்திய பொருட்களின் இறுதி விலையும் அதிகரித்தது, இதனால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் மற்ற நாடுகளுக்கு இணையாக விலை அதிகமாக இருப்பதால் ஆர்டர்கள் குறைவாக இருந்து வந்தது.

meeting

இந்நிலையில்தான், இந்தியா இங்கிலாந்து சுகந்திர வர்த்தக ஒப்பந்தம் (INDIA UK FTA) கரூர் வீட்டு உபயோக ஜவுளி தொழிலுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் இந்திய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்திய அரசின் வாணிபம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கோவை அயல்நாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் அலுவலகம் இணைந்து நடத்திய இந்தியா- இங்கிலாந்து ஏற்றுமதி தொடக்க விழா நிகழ்ச்சி, கரூரில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் ஸ்ரீதர், கரூரிலிருந்து சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் இங்கிலாந்துக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கொடியசைத்து முதல் சுதந்திர வர்த்தக ஏற்றுமதியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன், கரூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ் மற்றும் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கௌரவத் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் ஸ்ரீதர்,

"இங்கிலாந்து- இந்தியா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வரிவிலக்கு ஒப்பந்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், இனிவரும் ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். கடந்த ஆண்டில் ரூ. 800 கோடி மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் கரூரிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

தற்போது, ஏற்பட்டுள்ள இந்தியா- இங்கிலாந்து சுங்க வரி விலக்கு காரணமாக, ரூ.1600 கோடி வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஆர்டர்கள் கிடைக்கும் என தொழில்துறை இடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தகத்தால் இந்திய ஏற்றுமதி இரு மடங்காக உயரும். மேலும், இந்தியா- இங்கிலாந்து இடையிலான உறவை வலுப்படுத்தும் இந்திய ஏற்றுமதி ஜவுளி பொருட்கள் 100 சதவிகிதம் தரமானவை என்பதால் அதிக அளவில் இந்தியாவில் இருந்து ஜவுளி உற்பத்தி பொருட்கள் இறக்குமதி செய்து கொள்ள இங்கிலாந்து அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.

இதனால், மற்ற ஜவுளி உற்பத்தி நாடுகளாக உள்ள போட்டியாளர்களான வங்கதேசம், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் ஜவுளி உற்பத்தி பொருட்களுக்கு வரிவிதிப்பு உள்ள நிலையில், இந்திய ஜவுளி பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு ஒரு புதிய மைல்கல்லாக இந்திய ஏற்றுமதியில் மேலும் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிப்பதால் நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்" என்றார் .

Prominence : "ஷாருக்கானிடம் ஐடியாவைச் சொன்னோம்; அவரும் கை கோர்த்தார்" - நிர்வாக இயக்குநர் நந்தகுமார்

சென்னை அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் Prominence Home works என்ற வீட்டு பணிகளுக்கான Interior design modular company-யின் சென்னையில் இரண்டாவது கிளை பிரமாண்டமாக திறக்கப்பட்டது.இதன் முதல் நிகழ்வாக pr... மேலும் பார்க்க

'அதானி வழக்கை ஓராண்டிற்கு முன்பே தள்ளுபடி செய்திருக்க வேண்டும்' - அமெரிக்க நீதித்துறை விளக்கம்

கடந்த மே மாதம், அமெரிக்காவில் அதானி மற்றும் அதானி குழுமத்தின் மீது தொடர்ந்திருந்த மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்ய கோரியது அமெரிக்க நீதித் துறை. இந்த வழக்குகள் முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் காலத்தில் ... மேலும் பார்க்க

GST : `13 மாதங்களில் இல்லாத வளர்ச்சி' - ஜூன் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடியைத் தாண்டியது!

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜூன் 2026-ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப... மேலும் பார்க்க

"கரூரில் ஜவுளி பரிசோதனை மையம்" - மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தகவல்

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் கௌரவத் தலைவர் அட்லஸ் M.நாச்சிமுத்து மற்றும் தலைவர் P.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. meetingஇந்த நிகழ்ச்சியில் சிறப்... மேலும் பார்க்க

மயிலாப்பூர்: இரு சக்கர வாகனமே கடை: கருப்பு உளுந்து களி டு இளநீர் அல்வா... கவனம் ஈர்க்கும் இளைஞர்!

சென்னையின் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் அருகே மாலை நேரத்தில் மக்கள் கூட்டத்துக்கிடையே, இளைஞர் ஒருவரின் வித்தியாசமான முயற்சி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.டூ வீலரிலேயே சிறுதானிய உணவுகள், பாரம... மேலும் பார்க்க

வெறும் கிரெடிட் கார்டு ஆப் மட்டுமல்ல.! CRED மீது META ரூ.8,500 கோடியை கொட்டுவதன் மெகா பிளான் என்ன?

இந்தியாவின் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றான க்ரெட் (CRED) மீது, டெக் உலகின் ஜாம்பவானான மெட்டா (Meta) நிறுவனம் சுமார் 900 மில்லியன் டாலர் (சுமார் 8,500 கோடி முதலீடு... மேலும் பார்க்க