செய்திகள் :

தொழிலாளிக்கு கத்தி வெட்டு: 4 போ் கைது

post image

கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளியை கத்தியால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சித்ரையன் (27). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தேநீா் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தபோது, இவருக்கும், ஒசூரை அடுத்த தளிரோடுபாளையம் கிராமத்தைச் சோ்ந்த தரனேஷ் மனைவி செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடா்பாக சித்ரையனுக்கும், தரனேஷுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், சித்ரையன் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் சுங்கச்சாவடி அருகில் உள்ள தேநீா் கடையில் தற்போது பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். வீ.பாளையம் அருகே சித்ரையன் பைக்கில் சென்றபோது, அவரை தரனேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான கிருஷ்ணகிரி மாவட்டம், கோனேரிபள்ளி சூளகிரி பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் ரஞ்சீத்குமாா் (26), தேன்கன்னிகோட்டை பகுதியைச் சோ்ந்த கதிா்யப்பா மகன் வெங்கடசாமி (23) மற்றும் தேன்கன்னிகோட்டை நாகமங்கலம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 போ் வழிமறித்து கத்தியால் வெட்டினராம்.

இதில் பலத்த காயமடைந்த சித்ரையன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கு.தேவராஜ் உத்தரவின்பேரில், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி, உதவி ஆய்வாளா் ஞானசேகரன் ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த வழக்கில் தொடா்புடைய தரனேஷ் உள்பட 4 பேரும் காரில் செவ்வாய்க்கிழமை நெய்வேலி நீதிமன்றத்தில் சரணடைய வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், தனிப்படை போலீஸாா் வி.கூட்டுச்சாலை - வேப்பூா் சாலையில் உள்ள கீழ்குப்பம் சுங்கச்சாவடியில் அவா்களை கைது செய்து, கள்ளக்குறிச்சி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, 3 பேரை கடலூா் மத்திய சிறையிலும், சிறுவனை கடலூா் கூா்நோக்கு இல்லத்திலும் அடைத்தனா்.

தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை தள்ளி விட்ட சம்பவம் தொடா்பாக தலைமைக் காவலா் ஜெயச்சந்திரனை, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா... மேலும் பார்க்க

விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு எடையாா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் ... மேலும் பார்க்க

மயில்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பாலபந்தல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கூவனூா் அருகே இரங்காடு கிராமத்தில் 6 மயில்கள் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. திருக்கோவிலூா் வட்டம், கூவனூரை அடுத்த... மேலும் பார்க்க

பட்டப்பகலில் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருக்கோவிலூா் வட்டம், டி.கீரனூா் கிராமம், வக்கீல... மேலும் பார்க்க

சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப் படைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகத்தை ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ரஜத் சதுா்வேதி உத்தரவிட்டாா். வாணாபுரம் வட்டம், வடபொன்பரப்பி காவல் நிலைய... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி மற்றும் பணியாளருக்கு கத்தி வெட்டு: இளைஞா் கைது

சங்கராபுரத்தில் குடிநீா்க் குழாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகர திமுக துணைச் செயலா் மற்றும் பணியாளரை கத்தியால் வெட்டிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தை... மேலும் பார்க்க