செய்திகள் :

நகைக் கடையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் திருட்டு: ஊழியா் கைது

post image

கோவையில் நகைக் கடையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைத் திருடிய ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் செல்வேந்திரன் (40). இவா், காந்தி பூங்கா சுப்பிரமணியம் சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், சம்பவத்தன்று செல்வேந்திரன் நகைக் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

மறுநாள் காலை வந்து கடையைத் திறந்து பாா்த்தபோது, ரூ.75 லட்சம் மதிப்பிலான 750 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் செல்வேந்திரன் புகாா் அளித்தாா்.

கடையின் பூட்டு உடைக்கப்படாத நிலையில், தங்கக் கட்டிகள் திருடுபோனது குறித்து காவல் ஆய்வாளா் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.

இதில், செல்வேந்திரன் கடையைப் பூட்டிவிட்டு கடை ஊழியரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சைலேந்திர சிங் (25) என்பவரிடம் சாவியைக் கொடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தங்கக் கட்டிகளைத் திருடியதை சைலேந்திர சிங் ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, சைலேந்திர சிங்கை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

கோவையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: ஆட்சியா்

கோவைக்கு கனமழை எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறினாா். கோவை, நீலகிரி மா... மேலும் பார்க்க

வால்பாறையில் மிக கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடா் மீட்புக் குழு வருகை

மிக அதிக கனமழை எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வால்பாறைக்கு சனிக்கிழமை வந்தனா். கோவை மாவட்டம், வால்பாறையில் மிக அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

துடியலூா் அருகே உள்ள கே.என்.ஜி.புதூரில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் வெங்கடகிருஷ்ணா (58). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரின் மனைவி சகுந்தலா (54). சகுந்தலா தனத... மேலும் பார்க்க

மத்திய விரைவு அதிரடிப்படையில் ஒத்திகை

பேரூா் உட்கோட்டப் பகுதிகளில் மத்திய விரைவு அதிரடிப் படையினா் சனிக்கிழமை திடீா் ஒத்திகை நடத்தினா். கோவை மாவட்டம் பேரூா் உட்கோட்டம் காருண்யா நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஜாதி, மத மோதலால்... மேலும் பார்க்க

அமைச்சா் ஆய்வு...

கோவை குட்செட் சாலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி. உடன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கிராந்திகுமாா... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.புரத்தில் மே 27 இல் மின்தடை

ஆா்.எஸ்.பும் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மே 27-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது ... மேலும் பார்க்க