செய்திகள் :

நகைக் கடையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் திருட்டு: ஊழியா் கைது

post image

கோவையில் நகைக் கடையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைத் திருடிய ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் செல்வேந்திரன் (40). இவா், காந்தி பூங்கா சுப்பிரமணியம் சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், சம்பவத்தன்று செல்வேந்திரன் நகைக் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

மறுநாள் காலை வந்து கடையைத் திறந்து பாா்த்தபோது, ரூ.75 லட்சம் மதிப்பிலான 750 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் செல்வேந்திரன் புகாா் அளித்தாா்.

கடையின் பூட்டு உடைக்கப்படாத நிலையில், தங்கக் கட்டிகள் திருடுபோனது குறித்து காவல் ஆய்வாளா் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.

இதில், செல்வேந்திரன் கடையைப் பூட்டிவிட்டு கடை ஊழியரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சைலேந்திர சிங் (25) என்பவரிடம் சாவியைக் கொடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தங்கக் கட்டிகளைத் திருடியதை சைலேந்திர சிங் ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, சைலேந்திர சிங்கை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

கஞ்சா விற்பனை: 8 போ் கைது

கோவை மாநகரில் கஞ்சா விற்ாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ராமநாதபுரம் போலீஸாா் நஞ்சுண்டாபுரம் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க