செய்திகள் :

'நிகழ்ச்சி தொடர்பாக பேசியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்!" - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்!

post image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Bigg Boss
பிக்பாஸ்

இந்த நிலையில், சர்ச்சைக்குள்ளான விஜய் சேதுபதியின் கருத்து குறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

பிக்பாஸில் கடந்த சனிக்கிழமை வெளியான எபிசோடில், 'தலைமைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிவிட்டு பிரச்னை வரும்போது எதிர்க்கட்சி மீது பழியை போட்டு தெறித்து ஓடுவது தலைமைப் பண்பல்ல!' என நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை மையப்படுத்திப் பேசியிருந்தார். இதை முதல்வர் விஜய்யை நோக்கிய விமர்சனமாக எடுத்துக் கொண்டு தவெகவினர் சமூகவலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

இந்நிலையில் இதுதொடர்பாக விஜய் டிவி அளித்திருக்கும் விளக்கத்தில், 'Bigg Boss தமிழ் சீசன் 10 ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள், கருத்துகள் அனைத்தும் நிகழ்ச்சியை மையப்படுத்திய சூழலுக்கு உட்பட்டவையே. அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு அல்லது கொள்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது’ என விஜய் டிவி தெரிவித்துள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தவொரு கருத்தும் நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர், அமைப்பு அல்லது சூழ்நிலையை ஆதரிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ அல்லது பிரதிபலிப்பதாகவோ கருதக்கூடாது என்றும் விளக்கம் அளித்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் கருத்துக்கு தவெக தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய் டிவியின் இந்த விளக்கம் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

"முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்" - ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்

கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இரண... மேலும் பார்க்க

"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்..." - கனிமொழி சந்தோஷ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும... மேலும் பார்க்க

Vijay: ``முதல்வர் விஜய் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார்’’ - அமைச்சர் செங்கோட்டையன்

வேலூரில், அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் ஆட்சியில், எல்லாத் துறைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு, சட்டமன்ற உ... மேலும் பார்க்க

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றக் கோரி போராட்டம்; தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.இது தொடர்பாக ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்: ``ஸ்டாலின் என்னுடன் ஆலோசனை நடத்தினார்" - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக-வின் 22-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``2005-ம் ஆண்டு கேப்டன் வ... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: "யாரைத் திருப்திப்படுத்த?" - உதயநிதி கேள்வி

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடத்த, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அதற்கு குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர்... மேலும் பார்க்க