செய்திகள் :

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

post image

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவுக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோருடன் நேரடியாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலமும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி ஆலோசனை நடத்தியபிறகு இந்த அறிவிப்பை உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபியா வெளியிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் வந்திருந்த ஐரோப்பிய நாடுகளின தலைவர்களும் அதிபர் ùஸலென்ஸ்கியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடத்திய உரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் திங்கள்கிழமை (மே 12) முதல் 30 நாள்களுக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க உக்ரைனும் நட்பு நாடுகளும் தயாராக உள்ளன. கடல், தரை, வான்வழித் தாக்குதல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் முற்றிலும் நிறுத்தப்படும்.

ரஷியா இதனை ஏற்றுக் கொண்டு, போர் நிறுத்தம் மீறப்படாமல் இருப்பதைக் கண்காணிப்பதற்கான செயல்திறன் மிக்க கட்டமைப்பு உருவாக்கப்பட்டால், நிரந்தர அமைதியை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும், இருதரப்பிலும் நம்பகத்தன்மையை வளர்ப்பதற்கும் வழிவகுக்கப்படும் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறுகையில், ’உக்ரைன் வந்துள்ள நான்கு நாடுகளின் தலைவர்களும் போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு அமெரிக்காவுடன் இணைந்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அழைப்பு விடுக்கிறோம். அவருக்கு அமைதியில் உண்மையிலேயே ஆசை இருந்தால் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

கடந்த 1945-ஆம் ஆண்டில் நாஜிக்களின் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றி கொண்ட தினம் ரஷியாவில் கொண்டாடப்படுவதையொட்டி, உக்ரைனில் மே 8 முதல் 10 வரை 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளவிருப்பதாக ரஷிய கடந்த மாதம் அறிவித்தது.

ஆனால், இந்த 3 நாள் போர் நிறுத்தம் வெறும் கண்துடைப்பு என்று விமர்சித்த உக்ரைன், ’ரஷியாவுக்கு உண்மையிலேயே அமைதியின் மீது அக்கறை இருந்தால் அந்த நாடு உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 30 நாள்களுக்காவது அந்த போர் நிறுத்தம் நீடித்திருக்க வேண்டும்' என்று அப்போதே வலியுறுத்தியது. அதன்படி, திங்கள்கிழமை முதல் 30 நாள்களுக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தற்போது அழைப்பு விடுத்துள்ளது.

இருந்தாலும், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரு தரப்பு போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அனைத்தும் மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த வெற்றி தின போர் நிறுத்தத்தையே அந்த நாடு நூற்றுக்கணக்கான முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியது.

அதற்கு முன்னரும், ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 30 மணி நேர போர் நிறுத்தத்துக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வதாக உக்ரைனும் கூறியது.

இருந்தாலும், போர் நிறுத்தத்தை மீறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.

அதே போல், எரிசக்தி மையங்கள் மீது 30 நாள்களுக்கு தாக்குதல் நடத்துவதில்லை என்று அமெரிக்கா முன்னிலையில் ரஷியாவும், உக்ரைனும் கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் இரு நாடுகளும் மீறியது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது: ... மேலும் பார்க்க

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரீட் தீவுக்கு 55 கி.மீ. வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்... மேலும் பார்க்க

சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போா்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக... மேலும் பார்க்க