செய்திகள் :

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! - என்ன செய்யப் போகிறது திமுக?

post image

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம் என்ன செய்யப்போகிறது?

அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு
அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு

தமிழகத்தில் காலியாகப் போகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.

திமுக தரப்பில் காங்கிரஸூக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உறுதி செய்தார்.

ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் மட்டுமே காங்கிரஸூக்கு திமுக அந்த ராஜ்ய சபா சீட்டை கொடுக்கும். மார்ச் 5 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், மார்ச் 3, அதாவது நாளைக்குள் கூட்டணி குறித்து உறுதியான முடிவை கூறுமாறு அறிவாலயம் தரப்பில் காங்கிரஸூக்கு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் குழு
காங்கிரஸ் குழு

ஆனால், இப்போது வரைக்கும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுத்ததைப் போன்றே தெரியவில்லை. 'கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது' என அறிவாலயத்தில் வைத்து செல்வப்பெருந்தகை பேசினாலும், டெல்லி சென்று '25 இடங்களுக்கெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது' என சோடங்கர் பேசுகிறார்.

27 அல்லது 28 இடங்கள் வரைக்கும் கொடுக்க திமுக முன்வருமென தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது காங்கிரஸூக்குமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலுமே கடைசி நிமிடம் வரை டிமாண்ட் ஏற்றி பேரம் பேசும் மனநிலையில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ்.

TVK Vijay - தவெக விஜய்
TVK Vijay - தவெக விஜய்

இந்நிலையில், திடீரென இன்று காலை முதல் ஹைதராபாத்தில்ல் ராகுல் காந்தியை சந்தித்து ஆதவ் அர்ஜூனா கூட்டணி குறித்து பேசி வருவதாக செய்தி சேனல்களில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆதவ் தரப்பில் விசாரிக்கையில் இதை முழுமையாக மறுக்கின்றனர். ஆனால், 'காங்கிரஸ் வந்தால் மகிழ்வுடன் வரவேற்போம்...' என்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் முன்பாக இப்போது 2 ஆப்சன்கள் இருக்கிறது. ஒன்று, திமுகவின் டெட்லைனுக்குள் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு ராஜ்யசபா சீட்டை வாங்க வேண்டும் அல்லது ராஜ்ய சபா சீட்டை தியாகம் செய்து கூடுதல் சீட்டுகளுக்காக இன்னும் முரண்டு பிடித்து பார்க்கலாம்.

அறிவாலயம் விதித்த டெட்லைன் முடியப்போகிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது?

காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!

“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர... மேலும் பார்க்க

ஈரான் : காமேனி மரணம் - மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.அமெரி... மேலும் பார்க்க

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட... மேலும் பார்க்க

Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மா... மேலும் பார்க்க

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்த... மேலும் பார்க்க