செய்திகள் :

'நேற்று தான் பார்த்தேன்...' பாக். தாக்குதலில் உயிரிழந்த அரசு அதிகாரி - உமர் அப்துல்லா வருத்தம்

post image

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தத் தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "ரஜோரியிலிருந்து ஒரு துயரச் செய்தி. ஜம்மு & காஷ்மீர் நிர்வாகத்தில் அர்ப்பணிப்புள்ள ஒரு அதிகாரியை நாங்கள் இழந்திருக்கிறோம்.

டிரோன் தாக்குதல்
டிரோன் தாக்குதல்

நேற்று தான், அந்த மாவட்டத்தைச் சுற்றிப் பார்க்க துணை முதலமைச்சருடன் சென்றிருந்தார். மேலும், நான் தலைமை தாங்கிய ஒரு ஆன்லைன் கூட்டத்தில் கூட அவர் பங்கேற்றிருந்தார்.

இன்று, பாகிஸ்தான் ரஜோரியை குறிவைத்து நடத்திய தாக்குதலில் அவருடைய வீடு தாக்கப்பட்டுள்ளது. இதில் எங்களது கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா உயிரிழந்துள்ளார்.

இந்தப் பயங்கரமான உயிரிழப்பு குறித்த எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுதங்கள் குறித்த கேள்வி; பாகிஸ்தான் அமைச்சரின் பதில் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையில், 'அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா?' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், "நான் உலகிற்குச் சொல்லிக... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன்? - பின்னணி!

சர்வதேச நாணய நிதியம் (IMF), நேற்று பாகிஸ்தானுக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், உடனடியாக 1 பில்லியன் டாலரை கடனாக விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. இந... மேலும் பார்க்க

இந்தியா, பாகிஸ்தானிடம் மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா; ஜெய்சங்கர் சொல்வதென்ன?

உலகில் எந்த மூலை முடுக்கில் சண்டை நடந்தாலும், அதைத் தீர்க்க முயற்சி செய்வது, பேச்சுவார்த்தை நடத்துவது உலக நாடுகளில் பெரிய அண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுகிற அமெரிக்காவின் வேலை.இதன் சமீபத்திய உதாரணங்... மேலும் பார்க்க

`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ - மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங்

இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங்... மேலும் பார்க்க

Operation Sindoor : `தகர்த்தெறியப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள்’ - இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' - விவரித்த கர்னல் சோபியா குரேஷி

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுலையில்."பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்... மேலும் பார்க்க