செய்திகள் :

'நேற்று தான் பார்த்தேன்...' பாக். தாக்குதலில் உயிரிழந்த அரசு அதிகாரி - உமர் அப்துல்லா வருத்தம்

post image

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தத் தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "ரஜோரியிலிருந்து ஒரு துயரச் செய்தி. ஜம்மு & காஷ்மீர் நிர்வாகத்தில் அர்ப்பணிப்புள்ள ஒரு அதிகாரியை நாங்கள் இழந்திருக்கிறோம்.

டிரோன் தாக்குதல்
டிரோன் தாக்குதல்

நேற்று தான், அந்த மாவட்டத்தைச் சுற்றிப் பார்க்க துணை முதலமைச்சருடன் சென்றிருந்தார். மேலும், நான் தலைமை தாங்கிய ஒரு ஆன்லைன் கூட்டத்தில் கூட அவர் பங்கேற்றிருந்தார்.

இன்று, பாகிஸ்தான் ரஜோரியை குறிவைத்து நடத்திய தாக்குதலில் அவருடைய வீடு தாக்கப்பட்டுள்ளது. இதில் எங்களது கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா உயிரிழந்துள்ளார்.

இந்தப் பயங்கரமான உயிரிழப்பு குறித்த எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதிகளை ஒழிக்கும் அரசு... ‘ஆன்லைன் பயங்கரவாதி’களைக் கண்டுகொள்ளாதது ஏனோ?

‘இலவச பங்கு முதலீட்டுப் பயிற்சி, இலவச டிரேடிங் டிப்ஸ், குறுகிய காலத்தில் அசாத்தியமான வருமானம், பிரபலங்கள் பேசுவதுபோல போலி வீடியோ, போலி சமூக வலைதளப் பக்கங்கள் எனப் பற்பல ரூபங்களில் முதலீட்டாளர்களைக் கு... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ``தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்படுகிறது. அதன்பிற... மேலும் பார்க்க

'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பத... மேலும் பார்க்க

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' - திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபல... மேலும் பார்க்க

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க