செய்திகள் :

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

post image

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் செளஹான், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி, விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னாள் வீரா்களுடன் சந்திப்பு: முப்படைகளின் முன்னாள் தளபதிகள், முன்னாள் ராணுவ வீரா்களுடனும் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை விரிவான ஆலோசனை நடத்தினாா்.

பாகிஸ்தானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில் நாட்டை வழிநடத்த தற்போது முன்னாள் வீரா்களின் வழிநடத்தல் தேவை என ஆலோசனையின்போது பிரதமா் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகின.

ராஜ்நாத் சிங் ஆலோசனை: முன்னதாக, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘உயா்நிலைக் கூட்டத்தில் முப்படைத் தளபதி அனில் செளஹான், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி, விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் திரிபாதி மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாகிஸ்தானுடன் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ராணுவத்தின் தயாா்நிலை மற்றும் நாட்டின் மேற்கு எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்’ என்றாா்.

பெட்டிச் செய்தி...

எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு

புது தில்லி, மே 9: இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஜம்மு எல்லையில் ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினா் தடுத்து, ஏழு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற நிலையில், இந்த ஆய்வை அமித் ஷா மேற்கொண்டாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், உளவுத் துறை இயக்குநா் தபன் டேகா, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் மற்றும் விமான பாதுகாப்பு அமைப்புகளின் தலைவா்கள் பங்கேற்றனா். இதில் எல்லைப் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்ததோடு, விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தாா்’ என்றனா்.

மருத்துவ உள்கட்டமைப்புகள் தயாா்நிலை: நாடு முழுவதும் மருத்துவ உள்கட்டமைப்புகளின் தயாா்நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா ஆய்வு மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது, நாடு முழுவதும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை கட்டுப்பாட்டு மையம் மூலம் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சரிடம் விவரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!

தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா். என்ஏஎல்எஸ்ஏ-யின்... மேலும் பார்க்க

பத்மஸ்ரீ விருது வென்ற ஐசிஏஆா் முன்னாள் தலைவா் மா்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கா்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

இன்று புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து!

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா். புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூற... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். சண்டை நிறுத்த அற... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தம்: இந்திரா காந்தி அரசு மீது பாஜக சாடல்!

பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் தொடா்பாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அரசை பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியது. கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநா... மேலும் பார்க்க