செய்திகள் :

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

post image

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வாகும். திருச்சூர் பூரம் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற உள்ளது. பூரம் விழாவுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவாம்பாடி தேவசம் போர்டுக்கு பட்டாசுகள் தயாரிக்கப்படும் முண்டத்திக்கோடு என்ற இடத்தில் இன்று  பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலானதாக இருந்ததை அடுத்து மீட்புப்பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, காம்பவுண்ட் சுவரை உடைத்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

பட்டாசு விபத்து நடந்த பகுதி

சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக தீ எரிந்ததுடன் பட்டாசுகளும் வெடித்து சிதறின. மாலை சுமார் 6 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், அப்பகுதியில் அதிக அளவில் புகை எழுந்து வருகிறது. பட்டாசு வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகளும், இறந்தவர்கள் உடலை அடையாளம் காணும் பணிகளும் நடந்து வருகின்றன. வெடிக்காத வெடிமருந்துகள் மீட்புப்பணிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

காயம் அடைந்தவர்களை மீட்டுச் செல்லும் காட்சி

திருச்சூர் பூரத்திற்காக பட்டாசுகள் தயாரித்து வந்த ஐந்து வெடிமருந்துக் கிடங்குகளில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 உடல்களும், மூன்று பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷிகா சுரேந்திரன் தெரிவித்தார். திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 23 பேரில், ஐந்து பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவலைக்கிடமாக உள்ளவர்கள் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாம்பிள் வெடிக்கட்டுக்கான பட்டாசுகள் தயாரித்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதமர் மோடி வருகை ரத்து!

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திற... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து: மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்டோர் பலி!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்... மேலும் பார்க்க

ரீல்ஸ் வீடியோவுக்காக கையில் துப்பாக்கியுடன் ஒரே பைக்கில் பயணம்; விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் பலி

மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் 3 சகோதரர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது. அவர்கள் முன்னால் செல்ல பின்னால் இருந்து மற்றொரு பைக்கில் அவர்களை... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்!

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது. ... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துவிருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனா... மேலும் பார்க்க

வால்பாறை: சுற்றுலா வேன் கவிழ்ந்து கொடூர விபத்து – 7 பேர் உயிரிழந்த சோகம்!

கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வால்பாறை செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த நிலையில் கோழிக்கோட்டில் இருந்து வால்பாறைக்கு 16 பே... மேலும் பார்க்க