செய்திகள் :

ரீல்ஸ் வீடியோவுக்காக கையில் துப்பாக்கியுடன் ஒரே பைக்கில் பயணம்; விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் பலி

post image

மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் 3 சகோதரர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது. அவர்கள் முன்னால் செல்ல பின்னால் இருந்து மற்றொரு பைக்கில் அவர்களை அவர்களின் நண்பர்கள் மற்றொரு பைக்கில் வந்தபடி வீடியோ எடுத்துக்கொண்டு வந்தனர். 3 சகோதரர்களும் தங்களுக்கு முன்பு சென்ற வாகனங்களை முந்திச்செல்ல முயறனர். பின்னால் வந்த அவர்களது நண்பர் பைக்கும் முந்திச்செல்ல முயன்றது. இரண்டு பைக்கும் ஒன்றையொன்று முந்திச்செல்வதில் தீவிரம் காட்டின. சகோதரர்கள் மூவரும் முன்னால் சென்ற லாரி ஒன்றை முந்திச்செல்ல முயன்றனர். அந்நேரம் மற்றொரு டிராக்டர் டிராலியில் செங்கல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.

அதனை கவனிக்காமல் முந்திச்செல்ல முயன்றதில் சகோதரர்களின் பைக் கட்டுப்பாட்டை இழந்து டிராலிமீது பின்புறத்தில் மோதிக்கொண்டது. இதில் சகோதரர்கள் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களை வீடியோ எடுத்துக்கொண்டு அவர்களது பைக்கிற்கு மிகவும் அருகில் பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு பேரின் பைக்கும் இந்த விபத்தில் சிக்கியது.

இதில் அதில் இருந்த பிரசாந்த் மற்றும் பிரதீப் ஆகியோர் மிகவும் படுகாயம் அடைந்தனர். இரண்டு பேரும் பேரும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த சகோதரர்கள் அப்லக்ஷ் கோல், அம்ரிஷ் கோல் மற்றும் ஹேம்ராஜ் கோல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையில் பண்ணி பதரியா என்ற இடத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் பைக்கில் மற்ற வாகனங்களை முந்திச்செல்ல முயன்ற சம்பவம் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி இருக்கிறது. முதல் கட்ட விசாரணையில் ரீல்ஸ் வீடியோ எடுக்க இதுபோன்று அவர்கள் செய்ததாகத் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பேருக்கு 17 வயதாகிறது.

ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து: மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்டோர் பலி!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்!

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது. ... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துவிருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனா... மேலும் பார்க்க

வால்பாறை: சுற்றுலா வேன் கவிழ்ந்து கொடூர விபத்து – 7 பேர் உயிரிழந்த சோகம்!

கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வால்பாறை செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த நிலையில் கோழிக்கோட்டில் இருந்து வால்பாறைக்கு 16 பே... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடிப்பு: 10 பேர் பலி?; 40 பேர் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் ... மேலும் பார்க்க

மண்டபம் அருகே டூ வீலர்கள் மோதல்; காய்ச்சல் சிகிச்சைக்குச் சென்ற சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் மூவரும் டூவீலரில... மேலும் பார்க்க