செய்திகள் :

சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடிப்பு: 10 பேர் பலி?; 40 பேர் படுகாயம்

post image

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் வெடிப்பு விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் சுமார் 2 மணி அளவில், ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்து ஏற்பட்டவுடன் ஆலை வளாகம் முழுவதும் பெரும் பதற்றமும் குழப்பமும் நிலவியது. வெடிப்புச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், தங்களைக் காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களை நோக்கி சிதறி ஓடினர். இதனால் அங்கு நெரிசல் சூழல் உருவானது.

இந்த விபத்தில் 30 முதல் 40 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அவசரகால மீட்புக் குழுவினரும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். விபத்து நடந்தவுடனேயே நிவாரண நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டாலும், பாய்லர் வெடித்ததற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோர விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மண்டபம் அருகே டூ வீலர்கள் மோதல்; காய்ச்சல் சிகிச்சைக்குச் சென்ற சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் மூவரும் டூவீலரில... மேலும் பார்க்க

டாக்சி மீது டேங்கர் மோதி ஒரே பெரும் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 11 பேர் பலி

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் இருந்து முர்பாட் என்ற இடத்திற்கு டாக்சி சேவை இயக்கப்படுகிறது. இந்த வழிதடத்தில் பஸ் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் ஷேர் டாக்சி அதிக அளவில் இயக்கப்படுகிறது. நேற... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ட்ரக்கிங் சென்ற மாணவர்கள்; வெடித்த ராக்கெட் லாஞ்சர் - என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றிருக்கின்றனர். அங்கி... மேலும் பார்க்க

ஐதராபாத்: காங்கிரீட் கலவை டேங்கர் விழுந்து விபத்து; BMW காரில் சிக்கி வழக்கறிஞர் பலி

ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் ராவ் தனது பி.எம்.டபிள்யூ காரில் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் காஞ்சிகச்சேர்லா என்ற இடத்தில் இருக்கும் டோல்கேட் அருகில்... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து; தவெக வேட்பாளரின் உறவினர்கள், தொண்டர்கள் காயம்|Photos

பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் விழுந்த கார்; 7 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகில் உள்ள தீண்டோரி சிவாஜி நகரில் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துள்ளானது. கார் சாலையோர தடுப்பை மீறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. கிணறு முழுக்க த... மேலும் பார்க்க