செய்திகள் :

TOUSKA: எச்சரிக்கையை புறக்கணித்த ஈரான்; விளைவு, கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா - சம்பவத்தின் பின்னணி?

post image

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தற்போது ஈரானின் கப்பல் ஒன்றை அமெரிக்கா பிடித்து வைத்துள்ளது.

ட்ரம்ப் பதிவு

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், "ஈரானியக் கொடி ஏந்திய 'தூஸ்கா' (TOUSKA) என்னும் சுமார் 900 அடி நீளமும், ஒரு விமானம் தாங்கிப் போர்க்கப்பலுக்கு நிகரான எடையும் கொண்ட சரக்குக் கப்பல் எங்களது கடற்படை முற்றுகையைத் தாண்டிச் செல்லமுயன்றது.

ஆனால் அது அவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை. ஓமன் வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பலான 'யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ்' (USS SPRUANCE), தூஸ்கா கப்பலை வழிமறித்து, நிறுத்துமாறு முறையான எச்சரிக்கை விடுத்தது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ஈரானிய மாலுமிகள் அதற்கு செவிசாய்க்க மறுத்ததால், எங்களது கடற்படைக் கப்பல் அதன் இயந்திர அறையில் துளையிட்டு, அந்தக் கப்பலை இருந்த இடத்திலேயே முடக்கியது.

தற்போது, அமெரிக்கக் கடற்படையினர் அந்த கப்பலைத் தங்கள் வசம் வைத்துள்ளனர். தூஸ்கா கப்பல் ஏற்கெனவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டிருப்பதால், அமெரிக்க நிதித்துறையின் தடைகளின் கீழ் உள்ளது.

தற்போது அந்தக் கப்பல் முழுமையாக எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் பதில்

'எங்களுடைய எந்தக் கப்பலும் அமெரிக்காவிடம் சிக்கவில்லை என்று முன்பு கூறிய ஈரான், பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "ஆக்கிரமிப்பு குணம் கொண்ட அமெரிக்கா, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும், கடல்சார் கொள்ளைச் செயலில் ஈடுபட்டதுடன், ஈரானின் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது... அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், பல பயங்கரவாத கடற்படை வீரர்களைக் கப்பலின் தளத்தில் இறக்கி, அதன் வழிசெலுத்தல் அமைப்பை முடக்கியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் இந்த ஆயுதம் ஏந்திய கொள்ளைச் செயலுக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் மற்றும் பழிவாங்கும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

`ராயபுரத்தால் நான்... ராயபுரத்துக்காக நான்!' - `இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை’ டி.ஜெயக்குமார்

ராயபுரத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜெயக்குமார் ஏழாவது முறையாகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். "கடந்த ஐந்து முறையைக் காட்டிலும், வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, ஆறாவது ம... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டையில் ஜொலிக்கும் தி.மு.க வேட்பாளர் - களத்தில் முந்தும் கவிதா தண்டபாணி

“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்கும். எங்கள் தொகுதியில் தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவைப் பார்த்தா... மேலும் பார்க்க

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என... மேலும் பார்க்க

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் - சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிச... மேலும் பார்க்க

தி.நகர் தொகுதிக்குத் திருப்பம் தரும் 6 அம்ச திட்டம்! பட்டியலிடும் ராஜா அன்பழகன்

"நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்... மேலும் பார்க்க

ஆவடி தொகுதி: “ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ - அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆவடி தொகுதியின் தி.மு.க வேட்பாளரும் அமைச்சர் சா.மு.நாசரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆவடி தொகுதி வேட்பாளரு... மேலும் பார்க்க