செய்திகள் :

பால் கொள்முதல் விலை... பஞ்சாப்பில் ரூ.65, தமிழ்நாட்டிலோ ரூ.34!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு உயர்த்தினால்தான், தங்களுக்குச் சிறிதளவாவது லாபம் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், ‘தமிழ்நாடு அரசு தற்போது உயர்த்தியுள்ள பால் கொள்முதல் விலை மிகவும் குறைவு. இது நியாயமானதல்ல’ எனக் கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், ‘ஆவின் நிறுவனத்துக்குப் பால் வழங்கி வரும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் விலை உயர்வு வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை, லிட்டருக்கு 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

இதன்படி, இனிவரும் நாள்களில் விவசாயிகளுக்குப் பால் கொள்முதல் விலையாக 34 ரூபாய் கிடைக்கும். இந்த விலை நிச்சயமாகப் போதாது. பசுந்தீவனம், அடர் தீவனம், பால் கறவைக் கூலி, மருத்துவச் செலவுகள் மற்றும் இதர பராமரிப்பு செலவுகள் போன்றவை கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, கறவை மாடுகள் வளர்ப்போர் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். எனவே, லிட்டருக்குக் குறைந்தபட்சம் 50 ரூபாயாவது வழங்கினால்தான் ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும்.

கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல் விலையாக ஒரு லிட்டருக்கு சராசரியாக 50 ரூபாய் வழங்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் 62 ரூபாயும், பஞ்சாப்பில் 65 ரூபாயும் வழங்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை, லிட்டருக்கு 44 ரூபாய் பால் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றது. ஆனால், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு, விவசாயிகளை மிகுந்த விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

‘தமிழக முதல்வர் விஜய், தற்போது வெளியிட்டுள்ள பால் விலை உயர்வைக் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு லிட்டருக்குக் குறைந்தபட்சம் 10 ரூபாயாவது உயர்த்தி வழங்க வேண்டும்’ என்பது கறவை மாடு வளர்ப்போரின் நியாயமான எதிர்பார்ப்பு.

தமிழக முதல்வர் விஜய், விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பாரா? பொறுத்திருந்து பார்க்கப் போதுமான காலமில்லை. உடனடியாக இதை கவனத்தில்கொண்டு நல்லதோர் அறிவிப்பை வெளியிடுவார் என உறுதியாக நம்புவோம். தவறும்பட்சத்தில் பால் நிறுத்தப் போராட்டம் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள் விவசாயிகள். மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள், பால். தமிழக அரசு நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

- ஆசிரியர்

தமிழ்நாடு கனிம வளத்துறையில் அடுத்தடுத்து எழும் புகார்கள்: TAMIN இருக்கும்போது புதிய நிறுவனம் ஏன்?

தமிழ்நாடு அரசுக்கு முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் கனிம வளத்துறையில், நிர்வாக நடைமுறைகள், குவாரி கண்காணிப்பு, அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அடுத்த... மேலும் பார்க்க

மதுரை: மனைவியின் சடலத்துடன் அலைக்கழிக்கப்பட்ட முதியவர்... அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மன வேதனை!

மதுரை மாநகர் மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் மதுரை மாநகராட்சியில்உதவி ஆணையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், இவர் மனைவி மணியம்மை மதுரை மாவட்டக் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல... மேலும் பார்க்க

'கண்ணின் இமை போல என்னைக் காத்து' - 41வது திருமண நாளில் மனைவியை நினைவுகூர்ந்த ஜேடிசி பிரபாகர்

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஜே.சி.டி. பிரபாகரின் மனைவி கிரேஸ் ஜெயந்தி கடந்த 2023-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இவர்களுக்கு இன்று 41-வது திருமண நாள்.... மேலும் பார்க்க

"இப்போ அவர் ரீல்ஸ் பண்றாரு; இந்த நோயை முதல்ல இறக்கி வைப்போம்!" - சென்னையில் பிரகாஷ் ராஜ்

சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில், பாஜக அரசை விமர்சித்தும், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார்.Prakash Rajஅந்த மாநாட்டில் பிரகாஷ் ராஜ் பேச... மேலும் பார்க்க

"இனியும் தாமதிக்காமல் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - நீலம் பண்பாட்டு மையம்

கேளம்பாக்கம் தையூரில் 22 வயதான பிரவீன் என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்ய இளைஞர்கள் பலர் ஓ.எம்.ஆர் பகுதியி... மேலும் பார்க்க

`துகாராமுக்கு நன்றி' - அதிரடி ரெய்டுகள்; சுத்தத்துக்கு மாறும் மும்பை ஹோட்டல்கள், வடாபாவ் கடைகள்!

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் பால் கலப்படத்திற்கு எதிராக... மேலும் பார்க்க