செய்திகள் :

பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது: அண்ணா தொழிற்சங்கம்

post image

வரும் பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்து, கடந்த 6 ஆண்டுகளாக ஊதியக் குழு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் வழங்கவில்லை என்று தெரிவித்து, போக்குவரத்துத் துறை செயலரை சந்திக்கவுள்ளாக அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர். கமலகண்ணன் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: தேர்தலில் பாஜகவுக்காக போலி வாக்களிக்கும் அதிகாரிகள்! அகிலேஷ் வெளியிட்ட ஆதாரம்

இந்த நிலையில், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டியை சென்னையில் இன்று சந்தித்து, ஊதியக் குழு பேச்சுவார்த்தை தொடர்பான மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், “வரும் பிப். 10-க்குள் ஊதியக்குழு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தவிட்டால் பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது.” என்று தெரிவித்தனர்.

பிகார் தலைநகரில் துப்பாக்கிச் சூடு! சுற்றி வளைத்த பாதுகாப்புப் படை!

பிகார் தலைநகர் பாட்னாவில் திடீரெனத் மக்கள் நிரம்பிய பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பதுங்கிய பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.கான்கர்பாக் பகுதியிலுள்ள ஓர் வீட்டின் வாசலில் ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் மீது பறந்த டிரோன்! செயலிழக்க வைத்த காவல் துறை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது பறந்த டிரோன் கேமராவை காவல் துறையினர் செயலிழக்க வைத்து வீழ்த்தியுள்ளனர்.அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது டிரோன்கள் பறக்கவிடுவதற்கு தடைசெய்யப்... மேலும் பார்க்க

அபுதாபியில் ‘மேட் இன் ரஷியா’ திருவிழா!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் 'மேட் இன் ரஷியா’ திருவிழா மற்றும் கண்காட்சி வருகின்ற பிப்.21 முதல் 5 நாள்களுக்கு நடத்தப்படவுள்ளது.ரஷிய கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் அதிநவீன தொ... மேலும் பார்க்க

சமூக நலத்திட்டங்களுக்கான நிதி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட மத்திய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வலியுறுத்தி மத்திய மகளிர்மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைஅமைச்சர் அன... மேலும் பார்க்க

ஜம்முவில் கடத்தப்பட்ட சகோதரிகள் சத்தீஸ்கரில் மீட்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடத்தப்பட்ட சகோதரிகள் இருவர் ஒரு வாரம் கழித்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.ஜம்முவின் ஜானிப்பூரில் கடந்த ஒரு வாரம் முன்பு 16 மற்ற... மேலும் பார்க்க

சென்னையில் 'பிங்க் ஆட்டோ' திட்டம்: மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம்!

சென்னையில் மார்ச் மாதம் முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடு... மேலும் பார்க்க