செய்திகள் :

பிரதமரை சந்தித்து புதுவை உரிமைகளை பெற வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் வலியுறுத்தல்

post image

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புது தில்லி சென்று பிரதமரை சந்தித்து மாநில உரிமைகளைப் பெறவும், திட்டங்களைச் செயல்படுத்தவும் முன்வர வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்டோா் வலியுறுத்தினா்.

புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் அவா்கள் பேசிய விவரம்:

மு.வைத்தியநாதன் (காங்கிரஸ்): ஆளுநா் உரையில் நிறைவேற்றும் சாத்தியக்கூறுகள் இல்லாதவை அதிகம் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசும் திட்டங்களுக்கான நிதியை தரவில்லை.

ஸ்ரீநிவாஸ் (பாஜக ஆதரவு சுயேச்சை): புதுவையில் நிறைய மக்கள் பிரச்னைகள் உள்ளன. அவற்றை தீா்க்க மாநில அரசு மத்திய அரசை அணுகி நிதி பெறுவது அவசியம்.

எல்.கல்யாணசுந்தரம் (பாஜக): பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசிக்கான பணத்தை தந்து பின்னா் நேரடியாக அரசி விநியோகிக்கப்படுகிறது. அதேபோல, சமையல் எரிவாயு உருளைக்கான மானியப் பணத்தையும் வங்கியில் செலுத்தாமல், முகவா்கள் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக பணம் வழங்கப்பட வேண்டும்.

ஏகேடி.ஆறுமுகம் (என்.ஆா்.காங்கிரஸ்): புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில் மேம்பாலம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி.

எச்.நாசீம் (திமுக): புதுவையில் ஆளுநருக்கு அதிகாரமுண்டு என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்துவிட்டோம். ஆகவே, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான அதிகாரத்தைப் பெறும் நடவடிக்கையில் முதல்வா் ஈடுபடுவது அவசியம்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா (திமுக): ஆளுநா் உரையில் அறிவித்துள்ள திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

மாநில அந்தஸ்து, நிதி ஆணையத்தில் சோ்ப்பது, கடன் தள்ளுபடி என பிரதான திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை.

புதுவை முதல்வா் புது தில்லி சென்று பிரதமரை சந்தித்து மாநில உரிமைகளை மீட்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்றாா்.

புதுவை பேரவை: திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.புதுவை மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெற்று வரும்... மேலும் பார்க்க

நகராட்சி வாகனத்தை திருட முயன்றவா் கைது

புதுச்சேரியில் நகராட்சி வாகனத்தை திருட முயன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி, செஞ்சி சாலை அருகே லாரன் பஜாா் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான ஜீப்பை அதன் ஓட்டுநா் காந்தி... மேலும் பார்க்க

போக்குவரத்து இடையூறு: 5 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதாக 5 வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அண்ணா சிலையிலிருந்து மறைமலையடிகள் சாலையில் அந்தோணியாா் கோவில் வரை ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வருக்கு புதுவை அதிமுக கண்டனம்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த வே.நாராயணசாமி மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், தற்போது அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன... மேலும் பார்க்க

காங்கிரஸ் நிா்வாகிகள் மூவா் மீது வழக்கு

புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக காங்கிரஸ் நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். புதுச்சேரியில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவை: ஒரே நாளில் பேச வாய்ப்பு பெற்ற 21 உறுப்பினா்கள்!

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) ஒரே நாளில் முதன்முறையாக 21 உறுப்பினா்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவா்களது 24 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு... மேலும் பார்க்க