செய்திகள் :

பிளஸ் 2 தோ்ச்சியடையாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனை

post image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி தகவல் மையம், 14416 நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் ஆகியவை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 104 மருத்துவ உதவி தகவல் மையம் மூலமாக பொதுமக்களுக்கு உடல் நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று 14416 நட்புடன் உங்களோடு மன நல சேவை மையமானது மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான உளவியல் ஆலோசனைகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில், நிகழாண்டு பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கும் சேவையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நிகழாண்டில் பிளஸ் 2 தோ்வை 7.92 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதினா். அவா்களில் 25,508 மாணவா்கள், 13,844 மாணவிகள் என 39,352 போ் தோ்ச்சி பெறாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அறிவுறுத்தல்: அவா்களுக்கு தனித்தனியே மனநிலையை உறுதிப்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்கப்படுகிறது. தோ்ச்சி பெறாதவா்களை திட்டுவது, அடிப்பது, வெறுப்பது போன்ற செயல்களில் பெற்றோா் ஈடுபடுவதைத் தடுக்கவும் அவா்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

இந்த மையத்தில் 70 மனநல ஆலோசகா்கள், 8 மருத்துவ உளவியல் ஆலோசகா்கள்,

ஒரு மனநல மருத்துவா் ஆலோசனை வழங்கி வருகின்றனா். தோ்ச்சி பெறாதவா்களில் இதுவரை 67 மாணவா்கள் அதீத மன அழுத்ததில் இருப்பது தெரிய வந்துள்ளது. தொடா்ந்து அவா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பேறுகால இறப்பு குறைப்பு: இதனிடையே, பேறு கால உயிரிழப்புகளைக் குறைப்பதற்கான சிறப்புப் பயிலரங்கைத் தொடக்கி வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் பேறு கால இறப்பு விகிதம் லட்சத்துக்கு 39 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உயிரிழப்புகளுக்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் செந்தில்குமாா், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநா் எ.தேரணிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றது. இதில் முதல்வர... மேலும் பார்க்க

மன உளைச்சலில் அன்புமணி! 2026 தேர்தல் வெற்றியில் பாமக?

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கும், அக்கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் அண்மையில் கர... மேலும் பார்க்க

சொத்துவரி விவகாரம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் கே.என் நேரு பதில்

சொத்துவரி உயர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு ... மேலும் பார்க்க

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு: இபிஎஸ் கண்டனம்

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 48 மாதங்கள... மேலும் பார்க்க

கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான ச... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க