செய்திகள் :

புகழ்பெற்ற கன்னட நடிகர் அனந்த் நாக்-க்கு தாதாசாகேப் பால்கே விருது; பிரதமர் மோடி வாழ்த்து!

post image

இந்தியத் திரைத்துறைக்கு ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, மூத்த நடிகர் அனந்த் நாக் அவர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான புகழ்பெற்ற ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பத்திரிகைத் தகவல் மையம் (PIB) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தலைமுறை கடந்து பலருக்கு முன்மாதிரியாகத் திகழும் அனந்த் நாக் அவர்களுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற செப்டம்பர் 22, 2026 அன்று குஜராத்தின் கெவாடியாவில் நடைபெறும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

நடிகர் அனந்த் நாக்
நடிகர் அனந்த் நாக்

இதனையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ``பல தசாப்தங்களாகத் தனது இயல்பான நடிப்பினாலும், பன்முகத் திறமையினாலும் இந்திய சினிமாவிலும், குறிப்பாக கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையைப் பதித்துள்ள அனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள்.

இவர் ஏற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் அபாரமான ஆழத்தையும் இயல்பையும் கொண்டு சேர்த்துள்ளார். இது அவருக்குக் கிடைத்த தகுதியான கௌரவம்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

1948 செப்டம்பர் 4 அன்று பிறந்த அனந்த் நாகர்கட்டே என்ற இயற்பெயர் கொண்ட அனந்த் நாக், கன்னடத் திரையுலகின் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்களில் ஒருவர். இவர் தனது திரைப் பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் 250-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களும், அதுதவிர தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி மற்றும் ஆங்கிலப் படங்களும் அடங்கும்.

நடிகர் அனந்த் நாக்
நடிகர் அனந்த் நாக்

திரைப்படங்கள் மட்டுமன்றி, பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘மால்குடி டேஸ்’ என்ற புகழ்பெற்ற தொடரிலும் இவர் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்காக ஐந்து முறை கர்நாடக மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு, 2025-ம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான 'பத்ம பூஷண்' விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது குறிப்பிடதக்கது.

அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை; கைப்பற்றப்பட்டவை என்னென்ன? - அறிக்கை வெளியீடு

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனை நிறைவடைந்த நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்ட ... மேலும் பார்க்க

"தவெக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணிக்கு எந்தப் பங்கமும் வராது" - விஜய் வசந்த் எம்பி நம்பிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், "சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் நீண்ட கா... மேலும் பார்க்க

``நான் யாரா? சுயமரியாதையுடைய இம்மண்ணின் மைந்தன்" - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதில்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பின்போது, ``ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக ஏற்காதவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?" என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியி... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சி முறைகேடு: ``செயல்முறை குறைபாடா? அப்பட்டமான முறைகேடா?" - அறப்போர் இயக்கம் கேள்வி

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அறப்போர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடு... மேலும் பார்க்க

போனில் வந்த ஆதவ்; தினமும் முதல்வருக்கு அப்டேட்; எப்படி இருக்கிறார் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு?

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு, அவரை தேர்தலில் தோற்கடித்தவர் த.வெ.க-வின் வி.எஸ்.பாபு. வெற்றிப் பெற்றவுடன், 'its over' என்பதுபோல அவர் ... மேலும் பார்க்க

"அமைச்சர் பதவி கிடைத்ததால்தானே நீங்கள் கூட்டணி மாறினீர்கள்" - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி

விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு ய... மேலும் பார்க்க