செய்திகள் :

``என் வீட்டுக் காவலாளியே என்னை விரட்டினார்" - பிச்சைக்காரராக ஒருநாள் வாழ்ந்த எம்எல்ஏ; காரணம் என்ன?

post image

மும்பையின் கட்கோபர் கிழக்குத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பராக் ஷா, ரூ. 5,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட இந்தியாவின் மிகப்பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர்.

பராக் ஷாவின் ஆன்மீக குரு, ஜைன மதத்தைப் பின்பற்றும் நம்ரமுனி மகராஜ். இவர் பராக் ஷாவுக்கு `சாதாரண மனிதர்கள் தினமும் சந்திக்கும் வாழ்க்கையின் கடினமான உண்மைகளையும் துன்பங்களையும் நேரடியாக உணர்ந்து கொள்வதற்காக, ஒரு நாள் பிச்சைக்காரராக வாழும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.

அதை ஏற்றுக்கொண்ட பராக் ஷா ஒருநாள், பணம் தரக்கூடிய அனைத்து ஆடம்பர வசதிகளையும், பாதுகாப்புகளையும் துறந்து ஒரு நாள் பிச்சைக்காரராக வலம் வந்திருக்கிறார்.

எம்.எல்.ஏ பராக் ஷா
எம்.எல்.ஏ பராக் ஷா

தெருக்களில் பிச்சை எடுத்து, அலைந்து திரிந்து, கடுமையான உடலுழைப்பையும், பொதுமக்களின் அவமதிப்புகளையும் அவர் சந்தித்திருக்கிறார்.

இது தொடர்பாக பராக் ஷா பேசும்போது, ``என் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ஏழை பிச்சைக்காரர் போல உருமாறி கட்கோபர் தெருக்களில் இறங்கினேன். அங்கு பிச்சை எடுத்தும், தெருவிலேயே சாப்பிட்டும், ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையில் இருக்கும் உண்மையான வலியையும் அவமானத்தையும் அனுபவித்தேன்.

இந்த அனுபவம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. என் குருவின் கட்டளை என் நன்மைக்காகத்தான் இருக்கும். பணம், புகழ் மற்றும் அதிகாரம் மனிதனுக்குள் அகந்தையை உண்டாக்கும். அந்த அகந்தையை அழித்து என்னை எப்போதும் அடக்கத்துடன் வைத்திருக்க இந்த அனுபவம் உதவியது.

பிச்சைக்காரன் வேடத்தில் நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கே சென்றபோது, என் சொந்த காவலாளியே என்னை வெளியே தள்ளினார்.

எம்.எல்.ஏ பராக் ஷா
எம்.எல்.ஏ பராக் ஷா

எப்போதும் பிறருக்கு உதவி செய்யும் என் நண்பர் ஒருவரிடம் சென்றபோது, அவரும் துரத்திவிட்டார். மக்கள் மனிதர்களை மதிப்பதில்லை, மாறாக அவர்களிடம் இருக்கும் பணம், பதவி மற்றும் அதிகாரத்தை மட்டுமே மதிக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.

மும்பையில் மனிதநேயம் இன்னமும் வாழ்கிறது. சிலர் என் மீது பரிதாபப்பட்டு 20 ரூபாய் தர்மம் கொடுத்தார்கள்" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

பின்னர் தன் வேடத்தைக் கலைத்துவிட்டு சாதாரண மனிதராக அதே இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் பேசி நிலைமையைக் கேட்டறிந்தார்.

``அந்தப் பதவிக்காக நான் செய்த மிகப்பெரிய தியாகம்" - குடியரசுத் தலைவரின் வைரல் பாதுகாவலர் பேட்டி!

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு உதவியாளராகப் (Aide-de-Camp - ADC) பணியாற்றியவர் முன்னாள் சிறப்புப் படை அதிகாரி மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அ... மேலும் பார்க்க

`கழுத்தில் மாட்டிய டிராக்டர் டயர்' - அசௌகரியத்துடன் திரியும் காட்டு யானை; வனத்துறை நடவடிக்கை என்ன?

அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்தப் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று உலா வந்த காட்சி அ... மேலும் பார்க்க

ஈபிள் கோபுரம் சென்ற சாமியார்கள்: `சமத்துவத்தை விட்டுத்தர முடியாது' - பெண் ஊழியர்கள் போராட்டம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே 'BAPS' (போச்சசான்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பின் புதிய கோயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர... மேலும் பார்க்க

``எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்" - இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து நிறுவனம் அழைப்பு; பின்னணி என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி (21). இணைய உலகில் ‘பிட்டு தபாஹி’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், தனது பகுதியில் கடுமையாக மாசுபடுத்... மேலும் பார்க்க

Viral: சொறிந்துவிடும் வேலை; மாதம் 14 லட்சம் வருமானம்; சீன இளைஞரின் வித்தியாசமான தொழில்!

சீனாவின் ஹூபய் (Hubei) மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் சியாவோகியோ (Zhang Xiaoqiao - 32). இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஏழு வெவ்வேறு வேலைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்க... மேலும் பார்க்க

I’m Game: `அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடை' - கயாடு லோஹர் குறித்து துல்கர் சல்மான்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர... மேலும் பார்க்க