செய்திகள் :

போனுக்கு டோக்கன்: 'கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் இது' - அண்ணாமலை விமர்சனம்

post image

நேற்று (செப்டம்பர் 1) முதல், தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களுக்கு மொபைல் போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை வைத்துச் செல்ல கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான கட்டணமும் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோயில்
கோயில்

நிம்மதியாகத் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும்.

கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.

யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.

எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்குத் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும்.

கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.”

"பெருவெள்ளத்திற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா காரணம்; இழப்பீடு வேண்டும்" - குற்றம்சாட்டும் நேபாள அரசு

கடந்த வாரம் (ஆகஸ்ட் 26), பனிப்பாறை சரிவினால் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இந்தப் பேரிடருக்குக் ... மேலும் பார்க்க

அரகஜா திலகம் `டு' ஜெயில் பரிகாரம்... முதல்வர் விஜய்யைச் சுற்றும் ஜோதிட சர்ச்சைகள்!

அரகஜா திலகம் :தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது கோட் ஷூட் அணிந்தது எந்தளவுக்கு பேசுபொருளானதோ அதைவிட, அவர் நெற்றியில் வைத்திருந்த கருப்பு நிற பொட்டு பேசுபொருளானது. அந்த கருப்பு மை போன்ற திலகம் அரகஜ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் GST வசூல் 1% குறைந்துள்ளது; தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? - TRB ராஜா கேள்வி

தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதி... மேலும் பார்க்க

திடீரென திறந்த அரசுப் பேருந்து கதவு; கீழே விழுந்து காயமடைந்த பள்ளி மாணவிகள் - பாய்ந்த நடவடிக்கை!

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

'அதிமுக-வுக்கே யூடர்ன்?' - கடுப்பில் தவெக நிர்வாகிகள்; குழப்பும் இசக்கி சுப்பையா!

`இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் வரை மீண்டும் எம்.எல்.ஏவாக பணி செய்ய அனுமதிக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார் தவெகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பை... மேலும் பார்க்க

தாய்லாந்தில் குவியும் 5000 அமெரிக்கப் படையினர்: பாலியல் தொழிலை குறிவைத்து ரெய்டு; என்ன நடக்கிறது?

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பட்டாயாவிற்கு இந்த வாரம் சுமார் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினர் வருகை தர உள்ளனர். 200 நாட்களுக்கு மேலாக கடலில் கழித்த பின்னர், 'யுஎஸ்எஸ் ஆப... மேலும் பார்க்க