செய்திகள் :

மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும்" - ராஜ் தாக்கரே

post image

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். ஆனால் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இக்கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு தாங்கள் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ராஜ் தாக்கரே தனது கட்சியின் கொங்கன் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசுகையில், பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், ''மராத்தி பேசாத மக்களால் மும்பை மாநகராட்சித் தேர்தலின் அரசியல் சூழல் மேலும் மேலும் பதட்டமடைந்து வருகிறது.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

எனவே மராத்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் வசிக்கும் மராத்தியர்களுக்கு இது மிகவும் முக்கியமான கடைசி தேர்தலாக இருக்கும். நாம் கவனக்குறைவாக இருந்தால் மும்பை நம் கையை விட்டு சென்றுவிடும். அப்படி நடந்தால் அது மராத்தி மக்களுக்குப் பேரழிவாக அமையும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது.

எனவே வாக்காளர்கள் உண்மையானவர்களா அல்லது போலியா என்பதை மக்கள் கவனத்தில் கொள்வது அவசியம். மக்கள் இதில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

ராஜ் தாக்கரே கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் கட்சியை பா.ஜ.க அதன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று ராஜ் தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கழற்றிவிட்டது. இதனால் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது.

ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே
ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே

இப்போது உத்தவ் தாக்கரேயுடன் ராஜ் தாக்கரே கைகோர்த்து இருக்கிறார். ராஜ் தாக்கரேயை எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் சரத்பவார் ஆதரவாகவே இருக்கிறார். ஆனால் இது தொடர்பாக சரத்பவார் தனது முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

மும்பையில் கான் யாரையும் மேயராக்க விடமாட்டோம் என்றும், இந்து ஒருவர்தான் மும்பைக்கு மேயராவார் என்றும் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க