செய்திகள் :

`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு' - சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; விளக்கமளித்த செங்கோட்டையன்

post image

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி பெயரையும் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோட்டில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப்‌ பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " வருவாய்த்துறையைப் பொறுத்தவரையில், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்களின் முகவரி, ரத்த வகை , ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி போன்ற விவரங்களை உள்ளடக்கிய 'டேட்டா' அடையாள அட்டை வழங்கலாமா என்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். முன்பெல்லாம், 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருவாய்த்துறையின் மூலமாக ஆசிரியர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் (வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ் போன்றவை) வழங்கும் வழக்கம் இருந்தது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு முன்னால் மாணவர்கள் வருவாய்த்துறை அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரைத் தேடிச் சென்றுதான் சான்றிதழ்களைப் பெற முடிந்தது. ஆனால், இப்போது வருவாய்த்துறையே நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்று அந்தப் பணிகளைச் செய்து வருகிறது. அதேபோல், தற்போது பள்ளிக்கல்வித்துறையும் வருவாய்த்துறையும் இணைந்து, மாணவர்களின் முகவரி, கல்வித் தகுதி மற்றும் ஆதார் அட்டை விவரங்களை உள்ளடக்கிய தரவுகளை அடையாள அட்டையாக வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தேவைப்படும் சான்றிதழ்களை வழங்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்தும் நடைபெறும். ஆனால், இந்த புதிய 'டேட்டா கார்டில்' சாதி அடிப்படையில் எந்த விவரமும் இடம்பெறாது.

பள்ளிகளில் வழங்கப்படும் இந்த அட்டையில் சாதியைக் குறிப்பிட்டால், அது மாணவர்களிடையே ஒருவித பாகுபாட்டையோ அல்லது மனவருத்தத்தையோ ஏற்படுத்தலாம். அனைவரும் ஒரே மதம், சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணத்தில்தான் பள்ளியில் குழந்தைகள் படிக்கிறார்கள். எங்களது இயக்கமும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கமாகும். எனவே, மாணவர் நலன் கருதியே இந்தத் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும்போது இந்த முகவரி மற்றும் ஆதார் விவரங்கள் மூலம் அவர்களுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும் இது ஏதுவாக அமையும். அதேபோல், வெளியூர்களுக்குச் சென்று திரும்பும்போது அவசரத் தேவைகளுக்கு மற்றவர்களைத் தொடர்பு கொள்ளவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இதை மட்டும்தான் நாங்கள் செய்யப் போகிறோம். சில ஊடகங்களில், இது சாதிச் சான்றிதழுடன் இணைக்கப்படப் போவதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால், சாதி விவரங்கள் இதில் எப்போதும் இணைக்கப்படப் போவதில்லை. அனைவரும் ஒன்றுதான், எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கில்தான் நம்முடைய கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கிறது. எனவே, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் போன்ற 'டேட்டா'க்கள் மட்டுமே இதில் இருக்கும். 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இதனை எப்படிச் செயல்படுத்தலாம் என்பது குறித்து இரு துறைகளும் இணைந்து விரைவில் ஆய்வு செய்ய இருக்கிறோம்" என்றார்.

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் ... மேலும் பார்க்க

`தவெக அரசு அமைய உழைத்தவர்கள் பொறுப்புகளில் இருப்பதில் என்ன தவறு?' - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார், நாடாளுமன்ற உ... மேலும் பார்க்க

Congress: மாணிக்கம் தாகூர் தலைவராக நியமனம்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் செல்வப்பெருந்தகை அப்பொறுப்பில் இருந்தார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகக் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்... மேலும் பார்க்க

"மாணவர்கள் அனைவரும் சமம்!" - பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளி மாணவர்களுக்கு சாதி பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்" என்று கூறியிரு... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: 9 ஆண்டுகள் ஏன் கூட்டணி; இப்போது ஏன் பிரிவு? - மதிமுக விளக்கம்

இன்று சென்னை அண்ணா நகரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32-வது பொதுக்குழு நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலா... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டில் தகுதியான பலர் இருக்கையில்..!' - டெல்லி பிரதிநிதி நியமனம்; விளக்கம் கேட்கும் பிரேமலதா!

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. இவர் ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொதுச்செயல... மேலும் பார்க்க