செய்திகள் :

`முதல்வர் அப்படி சொன்னதை நகைச்சுவை உணர்வுனு எடுத்துக்கிட்டேன்; ஆனாலும் குற்ற உணர்வு’ - நடிகை ஆர்த்தி

post image

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, இன்றும் நடித்து வருபவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. இவரின் தந்தை சில தினங்களுக்கு முன் வயோதிகம் காரணமாக காலமானார்.

இந்த நிலையில் அது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவரிடம் விசாரித்திருக்கிறார். ரொம்பவே நெகிழ்ச்சியுடன் அதை விவரித்தார் ஆர்த்தி.

''எங்க குடும்பம் பக்கா திமுக குடும்பம். நானும் சின்ன வயசுல இருந்தே திமுக மேடைகள்ல ஏறியிருக்கேன். எனக்கும் கணேஷ்க்கும் கல்யாணத்தை நடத்தி வச்சதே கலைஞர் அய்யாதான். கோபாலபுரத்துல கலைஞர் அய்யா மட்டுமில்லாம ஸ்டாலின், செல்வி அக்கா எல்லார் கூடவும் நல்ல தொடர்பு இருந்திச்சு.

இந்தச் சூழல்ல ஒரு தேர்தலையொட்டி திடீர்னு ஒருநாள் மறைந்த ஜெயலலிதாம்மா கிட்ட இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் வீட்டுல யாருக்குமே அங்க போக பிடிக்கலை. ஆனா தனிப்பட்ட முறையில எனக்கு அம்மாவை ரொம்பவே பிடிக்கும். அதுவும் போக அவரே விரும்பி கூப்பிடறப்ப போகாம இருந்தா எப்படினு போனேன்.

ஆர்த்தி கணேஷ்கர்

அங்க போனதும் குடும்பம் வேலை பத்தில்லாம் விசாரிச்சுட்டு, இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிடுறேன்னு சொல்லி பிரச்சாரத்துக்குப் போகச் சொல்லிட்டாங்க.

நான் திமுக-வுக்காக பேசறது தெரிஞ்சும் அவங்க கூப்பிட்டதால‌ என்னால மறுக்க முடியலை. அதனால அப்ப இருந்து அம்மா இருந்த‌ வரைக்கும் ஒவ்வொரு தேர்தல்லயும் அதிமுக-வுக்காக பிரச்சாரம் செய்தேன்.

அவர் மறைஞ்ச பிறகு எனக்கு வேற கட்சிக்குப் போகப் பிடிக்காததால் இப்ப எந்தக் கட்சியிலயும் சேராம சிவனேன்னு இருக்கேன்.

தலைமைச் செயலகத்துல வேலை பார்த்து ஓய்வு பெற்ற என் அப்பா சென்னையில் எங்கூடத்தான் இருந்தாங்க. சில தினங்களுக்கு முன்னாடி வயோதிக பிரச்னைகள் காரணமாகத் தவறிட்டாங்க. இந்தச் சூழல்ல ரெண்டு மூணு நாள் இருகும். காலையில நானும் கணவரும் அடையார் தொல்காப்பியர் பூங்காவுல வாக்கிங் போயிட்டிருந்தோம். எதேச்சையா பார்த்தா எதிர்ல முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிலருடன் வந்திட்டிருந்தார்.

ஆர்த்தி கணேஷ்

அம்மா கூப்பிட்டாங்கனு அதிமுகவுக்கு நான் பிரச்சாரம் பண்ணக் கிளம்பிட்டதுல இருந்தே எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு இருந்திட்டே இருந்தது. அதனால எதிர்ல இவரை பார்த்ததும் என்ன ரியாக்ட் செய்யறதுன்னே தெரியலை. பார்க்காம ஒதுங்கிப் போயிடலாமா, பார்த்தா என்ன பேசுவார், திட்டுவாரா.. இப்படி நொடிப்பொழுதுல பல யோசனை.

ஆனா யோசிச்சு முடிக்கறதுக்குள்ள 'என்னம்மா எப்படி இருக்கீங்க'னு நின்னு கேட்டுட்டார். வணக்கம் வச்சுட்டு பதில் சொன்னேன். 'திட்ட வேண்டியது இன்னும் இருக்கா அவ்வளவுதானா'னு சிரிச்சிக்கிட்டே கேட்டவர், அமைச்சர் மா.சு பக்கம் திரும்பி 'அதிமுகவுல நட்சத்திரப் பேச்சாளரா இருந்தவங்க' என்றார். பொதுவா நான் அதிமுக‌ மேடைகளில் திமுகவை திட்டறதில்ல. ஆனா சில இடங்களில் உள்ளூர் கட்சிக்காரங்க திட்டச் சொல்லி வற்புறுத்திப் பேச வைப்பாங்க. அதைத்தான் சொல்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது ஆர்த்தி கணேஷ்கர்

சிரிச்சு சமாளிச்சேன். அடுத்த செகண்ட் 'அப்பா தவறிட்டாராமே'னு கேட்டுட்டார். எனக்கு பெரிய ஆச்சரியம். அவருக்கு இருக்கிற வேலைகள்ல இந்தச் செய்தியும் தெரிஞ்சுருக்கேனுதான். தொடர்ந்து அப்பா பத்தி சில நிமிடங்கள் விசாரிச்சுட்டுக் கிளம்பிட்டார்.

அவர் அப்பா பத்தி விசாரிச்சது இந்த நிமிடம் வரை ஆச்சரியமாகவே இருக்கு. அதேபோல 'திட்டி முடிஞ்சதானு அவர் கேட்டதை கலைஞர் அய்யாவுடைய ஹுயூமர் சென்ஸ்னு நான் எடுத்துகிட்டேன். ஆனாலும் எனக்கு குற்ற உணர்வு இன்னும் குறையல' என்கிறார்.

Putin: டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்; இந்தச் சந்திப்பு ஏன் முக்கியமானது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.பிரதமர... மேலும் பார்க்க

``மாம்பழத்தின் விலையை நிர்ணயிப்பதில் ஆளுங்கட்சியை சார்ந்த மாபியா'' - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என நூறு நாட்களுக்கு மக்கள் சந்திப்பை நடத்தியிருந்தார். அதுசம்பந்தமாக இன்று (நவ.28) சென்னை எழும்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்... மேலும் பார்க்க

சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ரகுபதி பதில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.அதனைத்தொடர்ந்து எடப... மேலும் பார்க்க

தேர்வு அறையில் செல்போன்; விடைத்தாளை `ஸ்டேட்டஸ்’ வைத்த மாணவர்! - புதுச்சேரி பல்கலைக்கழக அவலம்

காரைக்கால், மாஹே, அந்தமான்–நிக்கோபார், லக்‌ஷதீப் என நான்கு கிளைகளுடன் புதுச்சேரி கலாபட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகி... மேலும் பார்க்க

”SIR கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறப் போவதில்லை” - சொல்கிறார் துரை வைகோ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.கவின் முதன்மை செயலாளர் துரை வைகோ, “த.வெ.கவில் இணைய செங்கோட்டையன் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை. அவர் இணைவதால்... மேலும் பார்க்க

பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

கொங்கு மண்டலம்2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. செங்கோட்டையன் தவெக வருகைக்கு பிறகு கொங்கு மண்டல அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே அதிமுக வலுவ... மேலும் பார்க்க