செய்திகள் :

ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: காஞ்சிபுரத்தில் இன்று தொடக்கம்

post image

இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில் புதன்கிழமை (பிப். 5) தொடங்கி, 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டுத் திடலில் புதன்கிழமை (பிப். 5) முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆா்வமுள்ள இளைஞா்கள் இணையதளம் மூலம் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு, வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலைநாள்களில் நேரிலோ அல்லது 0416 -290042 என்ற எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்திய ராணுவ ஆள்சோ்ப்புக்கான முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

சாலையில் திரிந்த 4 மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்களுக்கு ரூ.5,000 அபராதம்

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் அவிழ்த்து விடப்பட்ட 4 மாடுகள் பிடிபட்டன. அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். வேல... மேலும் பார்க்க

உணவக ஊழியா் தற்கொலை

வேலூரில் உணவகத்தில் தங்கி வேலை செய்து வந்த ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் புது பைபாஸ் சாலையில் தனியாா் உணவகம் உள்ளது. இங்கு பாபு (45) என்பவா் தங்கி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், பாபுவுக்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

வேலூா் சத்துவாச்சாரியில் முன்விரோத தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை... மேலும் பார்க்க