செய்திகள் :

திண்டுக்கல்: அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலக்கழிவுகள்; பின்னணி என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குடிநீர் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் கிடந்துள்ளது. மேலும் அந்தக் கவருக்குள் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ட மாணவர்கள் இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

தொட்டிக்குள் கிடந்த பேப்பர்
தொட்டிக்குள் கிடந்த பேப்பர்

உடனே ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் சொல்லவும் விரைந்து வந்த வடமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

குடிநீர் தொட்டிக்குள் கிடந்த பேப்பர் நனைந்திருந்ததால் அதில் இருந்த எழுத்துகள் படிக்க முடியாத அளவிற்கு அழிந்து போயிருந்தன.

பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"2018 வெள்ளப் பாதிப்பின்போது பினராயி விஜயன் சாப்பிடாமல் இருந்தாரா?" - ஆவேசமான வி.டி.சதீசன்

கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டன. அதே சமயம் அன்றைய தினம் மீட்புப்பணிகளை முடுக்கிவிடாமல் முதல்வர் வி.டி.சதீசன் ஒரு மதிய விருந்தில் க... மேலும் பார்க்க

தூய்மையான வைகை... வளமான மதுரை... அண்ணாமலை தலைமையில் வைகை ஆற்றில் தூய்மைப் பணி | Photo Album

அண்ணாமலை வைகை ஆற்றில் தூய்மைப் பணிஅண்ணாமலை வைகை ஆற்றில் தூய்மைப் பணிஅண்ணாமலை வைகை ஆற்றில் தூய்மைப் பணிஅண்ணாமலை வைகை ஆற்றில் தூய்மைப் பணிஅண்ணாமலை வைகை ஆற்றில் தூய்மைப் பணிஅண்ணாமலை வைகை ஆற்றில் தூய்மைப்... மேலும் பார்க்க

பழனி: "திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே தவெக-வுக்கு ஆதரவு" - எஸ்.பி. வேலுமணி

பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரன் அவர்களின் புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன்,... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் கோவில்: "அபிஷேக தீர்த்த கிணறு அருகிலேயே குப்பைகள் தேக்கம்" - அண்ணாமலை புகார்

மதுரையில் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பாக வைகை ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் இன்று நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட அண்ணாமலை குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டார்.இதைத் தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு; தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழ... மேலும் பார்க்க

”பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின் சாடல்

விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க தவறிய தவெக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் சட்டமன்ற எ... மேலும் பார்க்க