செய்திகள் :

வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

post image

புது தில்லி: வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மத்திய அரசு இயற்றிய வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2023-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘திருத்தப்பட்ட சட்டத்தில் வனம் என்பதற்கான விளக்கத்தில், சுமாா் 1.99 லட்சம் சதுர கிலோமீட்டா் வனப் பகுதி சோ்க்கப்படவில்லை’ என்று மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், அந்த மனுக்கள் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘வனப் பகுதியை குறைக்க வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் உச்சநீதிமன்றம் அனுமதிக்காது. குறைக்கப்படும் வனப் பரப்புக்கு ஈடான நிலம் வழங்கப்படும் வரை, வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்தத் தடை நீடிக்கும்.

இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 4-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க