செய்திகள் :

விவாகரத்து, 7 மாத கர்ப்பம்: கடத்தி மரத்தில் கட்டி தீவைக்கப்பட்ட பஞ்சாப் பெண் சோசியல் மீடியா பிரபலம்

post image

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்ஜீத் கவுர்(28). சோசியல் மீடியா பிரபலமான கவுர் கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் மதுபானக்கடை ஒன்றுக்கு அருகில் தனக்கு தெரிந்த இரண்டு பேரால் காரில் கடத்திச்செல்லப்பட்டார். மொரிண்டா என்ற நகரத்திற்கு கவுரை கடத்தி சென்று அடித்து உதைத்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு மல்பெர்ரி மரத்தில் கட்டி வைத்து தீவைத்தனர். கவுரின் நண்பர் ஒருவர் போர்வை ஒன்றால் கவுர் மீது பற்றிய தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மொரிண்டாவில் இருந்து மொஹாலி மருத்துவமனைக்கு கவுர் மாற்றப்பட்டார். அங்கிருந்து சண்டிகருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து கவுர் மயக்க நிலையில் இருந்தார்.

ஆனால் இடையில் அவருக்கு சுயநினைவு வந்தது. திடீரென கவுரின் உடல் நிலை மோசம் அடைந்து சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். கவுரின் தாயார் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ஜூலை 3 ஆம் தேதி, சண்டிகரில் உள்ள செக்டார் 34 இல் உள்ள ஒரு மதுபானக் கடைக்கு அருகில், சுபி மற்றும் பிண்டா ஆகிய இரண்டு பேர் கவுரை காரில் கடத்தி சென்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கவுர் என்ன காரணத்திற்காக கடத்தி தாக்கப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மஞ்ஜித் கவுர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அந்த மகனும் கவுரின் முன்னாள் கணவரோடு இருக்கிறார். ஆனால் கவுர் தற்போது இறந்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. கவுர் இறந்தபோது அவர் 7 மாதம் கர்ப்பமாக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின்மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் ... மேலும் பார்க்க

கும்பகோணம்: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை; பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கேரள ஜிம் பயிற்சியாளர்

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மா... மேலும் பார்க்க

ஆம்பூர்: பச்சிளம் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை; தாய், தந்தையால் அரங்கேறிய கொடூரம்; 4 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்காதோப்பு பாஷா நகர்ப் பகுதியில் வசிக்கும் டீ மாஸ்டர் தொழிலாளி ரஹமத்துல்லா, வயது 38. இவரின் மனைவி ஹவாமா. இவர்களுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகளாகிறது. ஏற்கெனவே இரு ஆண் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கிணற்றில் மிதந்த 2 சிறுவர்களின் பிணம்; கிராமத்தையே அலறவிட்ட சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், சுகுணா பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து நிலத்தின் உரிமையாளர் தண்ணீர்... மேலும் பார்க்க

அரக்கோணம்: கணவரின் மரணம், மீளமுடியாத துயரம்; இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி கோட்டையா, வயது 30. இவரின் மனைவி வள்ளி (23). இவர்களுக்கு 7 வயதில் பரத், 3 வயதில் சந்தோஷ் என்று இரு ... மேலும் பார்க்க