செய்திகள் :

111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி

post image

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் தினமும் கோடிக்கணக்கான பணத்தை இழக்கின்றனர், ஆனால் குற்றவாளிகள் சிக்காமல் தப்பித்து விடுகின்றனர்.

ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக சி.பி.ஐ.க்கும் தொடர்ச்சியாக புகார்கள் வந்திருந்தன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நாடு முழுவதும் இதுவரை பல புகார்கள் வந்திருந்தன. ஆரம்பத்தில் இதனை தனித்தனி புகாராக சி.பி.ஐ. அதிகாரிகள் நினைத்தனர்.

விசாரணையில் மொபைல் செயலியை பயன்படுத்தி பேமெண்ட் கேட்வே போன்ற சகல வசதிகளுடன் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்தது.

சித்தரிப்பு படம்

அதோடு கூகிளில் விளம்பரம், மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது, ஒரே நேரத்தில் பல சிம்கார்டுகளை பயன்படுத்தி மெசேஜ் அனுப்புவது, கிளைட் சர்வர் என அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அக்கும்பல் இயங்கி வந்ததையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஜார்கண்ட், ஹரியானா போன்ற மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தி, டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இம்மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 3 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இம்மோசடியை வெளிநாட்டு கும்பல் வெளிநாடுகளிலிருந்து கொண்டு இயக்கி வந்தது தெரிய வந்தது.

அடுத்தவர்களிடம் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு வாங்கி, அதன் மூலம் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். போலி ஆவணங்கள் மற்றும் போலி முகவரிகள் மூலம் 111 கம்பெனிகளை திறந்து, அதன் மூலம் வங்கிக் கணக்குகளையும் திறந்துள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய 150-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் ரூ.1000 கோடி வெளிநாட்டிலிருந்து வந்துள்ளது. ஒரு வங்கி கணக்கிற்கு மட்டும் மிகவும் குறுகிய காலத்தில் ரூ.152 கோடி வந்திருந்தது. அந்த கம்பெனி சீன பிரஜைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அந்த பணத்தை உடனுக்குடன் அவர்கள் கிரிப்டோகரன்சியாக மாற்றி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். இதில் நான்கு வெளிநாட்டு பிரஜைகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து, நான்கு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 27 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்து வருகிறது, அதிலும் குற்றவாளிகள் சிக்காமல் தப்பித்து வருகின்றனர்.

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளு... மேலும் பார்க்க

ஊட்டி: மூடப்பட்ட Hindustan Photo Films தொழிற்சாலையில் மண் திருட்டு; தொடரும் அத்துமீறல்; காரணம் என்ன?

தென்னாசியாவின் முதல் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1960-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவுள்ள வன... மேலும் பார்க்க

`93 பேர் மட்டுமே வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 வாக்காளர்கள் பதிவேற்றம்?' - அலுவலர்களுக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வ... மேலும் பார்க்க

``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலை... மேலும் பார்க்க