செய்திகள் :

``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிகர் சல்மான்

post image

சவூதி அரேபியாவில் தற்போது ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் நேற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “என் வாழ்க்கையின் பெரும்பகுதியை எப்போதும் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன்தான் செலவிட்டிருக்கிறேன்.

எனது நெருங்கிய நண்பர்களில் சிலரை நான் இழந்துவிட்டேன். இப்போது அவர்களில் 4-5 பேர் மட்டுமே என்னுடன் இருக்கிறார்கள்.

சல்மான் கான்
சல்மான் கான்

கடந்த 25-26 வருடங்களாக நான் இரவு உணவிற்கு வெளியே சென்றதில்லை. என் வாழ்க்கை படப்பிடிப்பு, விமான நிலையம், ஹோட்டல் அல்லது நிகழ்வுக்குச் சென்று பின்னர் படப்பிடிப்புக்குத் திரும்புவது போலவே செல்கிறது.

ரசிகர்கள் மிகவும் மரியாதை மற்றும் அன்பைத் தருகிறார்கள். அதனால்தான் நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அவ்வப்போது, என் உழைப்பால் எனக்கு கொஞ்சம் மனநிறைவு ஏற்படும்.

அடுத்து என்ன நடக்குமோ, எதிர்காலம் என்ன என யோசிப்பேன். அதையும் ரசிக்கிறேன்,” என்றார்.

சல்மான் கானை கொல்ல சிலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவர் முழு பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, பொது இடங்களுக்கு செல்வதை நடிகர் சல்மான் கான் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dharmendra: "இதயம் நொறுங்கிய நிலையில்..." - ஹேமமாலினியின் உருக்கமான பதிவு

கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா இயற்கை எய்தியிருந்தார். அவருடைய 90-வது பிறந்தநாள் இன்று. தர்மேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் அவருடைய மும்பை இல்... மேலும் பார்க்க

Aamir Khan: ``அதை நினைத்து அப்போது வீட்டிற்கு வந்ததும் அழுவேன்!'' - மனம் திறந்த ஆமிர் கான்

ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. கூடிய விரைவில் அதன் அத... மேலும் பார்க்க

LK7: "அவர் மும்பைக்கும் வரும்போது நரேஷன்" - லோகேஷ் கனகராஜ் உடனான படம் குறித்து ஆமிர் கான்

ஆமிர் கான் நடிப்பில் இந்த ஆண்டு 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கவிருப்பதாகவு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தர்மேந்திராவின் அஸ்தி கரைப்பு - தவிர்த்த ஹேமாமாலினி; ஓரங்கட்டினார்களா மகன்கள்?

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக செய்யப்பட்டது. அவரது உடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில... மேலும் பார்க்க

"அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்!" - 8 மணி நேர பணி குறித்து துல்கர் & ரானாவின் கருத்து என்ன?

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்த... மேலும் பார்க்க

`இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் தர்மேந்திராவின் தாயாரை சந்தித்தேன்!’ - ஹேமாமாலினி

பா.ஜ.க எம்.பி.யும் நடிகையுமான ஹேமாமாலினி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட்டிற்கு சென்று பிரபலம் அடைந்தார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடிகர் தர்மேந்திராவை அவர் திருமணமும் செய்து க... மேலும் பார்க்க