செய்திகள் :

Aamir Khan: ``அதை நினைத்து அப்போது வீட்டிற்கு வந்ததும் அழுவேன்!'' - மனம் திறந்த ஆமிர் கான்

post image

ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார்.

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. கூடிய விரைவில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் நடத்திய `தி லீடர்ஷிப் சம்மிட்' நிகழ்வில் தன்னுடைய கரியரின் தொடக்க காலம் குறித்தும், அப்போது அவர் எடுத்த தவறான முடிவுகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆமிர் கான்.

ஆமிர் கான்
ஆமிர் கான்

ஆமிர் கான் பேசுகையில், “எனது முதல் திரைப்படமான ‘கயாமத் செ கயாமத் தக்’ (QSQT) மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரே இரவில் நான் நட்சத்திரமாக மாறினேன்.

அதன் பிறகு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் பணியாற்ற விரும்பிய இயக்குநர்களிடமிருந்து வாய்ப்புகள் எனக்கு வரவில்லை.

எனக்கு விருப்பமான இயக்குநர்களின் பட்டியல் ஒன்று இருந்தது. ஆனால் அவர்களில் ஒருவர் கூட என்னை அணுகவில்லை.

அப்போது சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகும் என்னை நட்சத்திரமாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. பிறகு எனக்கு வந்தப் படங்களில் நான் நடிக்கத் தொடங்கினேன்.

ஆனால் அந்தப் படங்களின் படப்பிடிப்பு தொடங்கியதும், நான் செய்தது பெரிய தவறு என்பது புரிந்தது. அப்போது நான் செய்து வந்த பணிகளில் எனக்கு அதிருப்தி ஏற்பட்டது.

என்னுடைய முதல் படத்திற்குப் பிறகு எனது சினிமா கரியரின் முதல் இரண்டு ஆண்டுகளில் நான் மகிழ்ச்சியாக இல்லை. எனது உணர்வுக்கு ஏற்றவாறு பணியாற்றியவர்களுடன் ஒத்துப் போகவில்லை.

ஆமிர் கான்
ஆமிர் கான்

நான் நடித்த அந்தப் படங்களும் ஒவ்வொன்றாக வெளியாகத் தொடங்கின. அத்தனை படங்களும் தோல்வியே அடைந்தன. நான் ‘ஒன் ஃபிலிம் வொண்டர்’ என்று முத்திரை குத்தப்பட்டேன்.

அந்த தோல்விப் படங்கள் என்னை அந்த நிலைக்குக் கொண்டு வந்தன. ‘இப்படியே எனது கரியர் வீணாகப் போய்விடும்!’ என்று நினைத்தேன். தினமும் மாலையில் வீடு திரும்பியதும் அதை நினைத்து அழுவேன்.

அப்போது, நான் எனது பணியில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்று எனக்கு நானே சத்தியம் செய்துகொண்டேன்.” எனக் கூறியிருக்கிறார்.

Dharmendra: "இதயம் நொறுங்கிய நிலையில்..." - ஹேமமாலினியின் உருக்கமான பதிவு

கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா இயற்கை எய்தியிருந்தார். அவருடைய 90-வது பிறந்தநாள் இன்று. தர்மேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் அவருடைய மும்பை இல்... மேலும் பார்க்க

LK7: "அவர் மும்பைக்கும் வரும்போது நரேஷன்" - லோகேஷ் கனகராஜ் உடனான படம் குறித்து ஆமிர் கான்

ஆமிர் கான் நடிப்பில் இந்த ஆண்டு 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கவிருப்பதாகவு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தர்மேந்திராவின் அஸ்தி கரைப்பு - தவிர்த்த ஹேமாமாலினி; ஓரங்கட்டினார்களா மகன்கள்?

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக செய்யப்பட்டது. அவரது உடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில... மேலும் பார்க்க

"அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்!" - 8 மணி நேர பணி குறித்து துல்கர் & ரானாவின் கருத்து என்ன?

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்த... மேலும் பார்க்க

`இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் தர்மேந்திராவின் தாயாரை சந்தித்தேன்!’ - ஹேமாமாலினி

பா.ஜ.க எம்.பி.யும் நடிகையுமான ஹேமாமாலினி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட்டிற்கு சென்று பிரபலம் அடைந்தார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடிகர் தர்மேந்திராவை அவர் திருமணமும் செய்து க... மேலும் பார்க்க

"இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான்" - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ்.சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் ந... மேலும் பார்க்க