ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு...
BB Tamil 9: மவுன்ட் ரோடு விளம்பரம், முக்கோண லவ் ட்ராக்.. எஃப்.ஜே. எவிக்ஷனில் தப்புவது எப்படி?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விஜய் டிவியில் 60 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் நான்கு வாரங்கள்தான் மிச்சமிருக்கிற சூழலில் அந்த வீட்டுக்குள் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
முன்னதாக இந்த சீசன் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கியது. அதில் எவிக்ஷனுக்கு முன்பே நந்தினி வெளியேறினார்.
அடுத்த சில தினங்களில் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி ஆனார்கள்.
நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ஒரேயொரு வாரம் எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் பிரவீன், பிரவீன் காந்தி, திவாகர், துஷார், பிரஜின், ரம்யா, வியானா அப்சரா, கெமி ஆகிய ஒன்பது பேர் இதுவரை வெளியேறியுள்ளனர்
நிகழ்ச்சி நிறைவடைய நான்கு வாரங்களே இருக்கும் சூழலில் எப்படி இத்தனை பேர் உள்ளே என்கிற கேள்வியை நிகழ்ச்சியுடன் தொடர்பிலிருக்கும் சிலரிடம் கேட்டோம்.
''இந்த சீசனில் சோஷியல் மீடியா பிரபலங்கள் அதிகமா கலந்துகிட்டதால் ஆரம்பத்துல சில நாட்கள் அவங்க நிகழ்ச்சியைச் சரியா புரிஞ்சுக்காம கன்டென்ட் தர்றோம்ங்கிற பேருல ஏதேதோ செய்திட்டிருந்தாங்க. அதனால தான் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நாலு டிவி பிரபலங்கள் இறக்கப்பட்டார்கள்.
இருந்தபோதும் இப்ப வரை குறிப்பிட்ட ஒரு சிலராலதான் ஓரளவு நிகழ்ச்சி பார்க்கப்பட்டு வருது. இந்தச் சூழல்ல நாமினேஷன் பட்டியல்ல அவங்க வந்தா அவங்க வெளியேறிடக்கூடாதுனு தான் நினைக்கிறாங்க. இபோதைக்கு உள்ள இருக்கிற போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகம்தான்னாலும் , ஆனா கூட்டம் இருந்தா அதுவே பேசப்படும்னு நினைக்கிறாங்களோ என்னவோ' என்கிறார்கள் இவர்கள்.
இதனிடையே போட்டியாளர்களில் ஒருவரான எஃப்.ஜே இரு வாரங்களுக்கு முன்பே எவிக்ட் ஆக வேண்டியது, ஆனால் கடைசி நேரத்தில் தப்பித்தார் என்றொரு பேச்சு பிக் பாஸைத் தொடர்ந்து கவனித்து வரும் கூட்டத்தில் கேட்க, அது குறித்தும் கேட்டோம்.
'இது தொடர்பா வெவ்வேறு மாதிரியான தகவல் போயிட்டிருக்கு. அந்த வீட்டுக்குள் இருக்கிறதுலயே லவ் ட்ராக்குக்கு ஏத்தவர் அவர் மட்டுமே. முதல்ல ஆதிரை பிறகு வியானா, மறுபடியும் ஆதிரைனு அவர் தொடர்பான காட்சிகள் கன்டென்ட்ங்கிறதால அவர் நிகழ்ச்சியில் தொடரணும்னுதான் தயாரிப்பு தரப்புல விரும்பறதா சொல்றாங்க. முதல்ல வெளியேறின ஆதிரை வைல்டு கார்டு மூலம் திரும்ப வந்ததும் கன்டென்ட்டுக்காகத்தான்னு சொல்லித் தெரிய வேண்டியதில்லை' என்கின்றனர் சிலர்.

'இந்த வாரம் கூட முதல் நாள் ரம்யா வெளியேறிட அடுத்த நாள் வியானா எஃப் ஜே ரெண்டு பேருமே எலிமினேஷன் லிஸ்ட்டுல இருந்ததால் ரெண்டு பேரையும் அனுப்பறதாகவும் முதல்ல முடிவானதா சொல்லப்பட்டுச்சு. அதிகப்படியான போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் இருக்கிறதால மூணு பேர் எவிக்ட் ஆகறதுல எந்த பிரச்னையும் இல்லைனுதான் சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததோ தெரியல, கடந்த வாரம் போலவே கடைசி நேரத்துல ட்விஸ்ட் நிகழ்ந்து வழக்கம்போல் எஃப் ஜே தப்பிச்சிட்டார். இதுக்குப் பின்னணியில எஃப்.ஜே.வின் தீவிரமான பி.ஆர். ஒர்க் இருக்கறதாகவும் ஒரு பேச்சு இருக்கு.
எஃப்.ஜே. வுடைய குடும்பத்தினர் நிகழ்ச்சி தொடங்குனதுமே 'என் மகனுக்கு ஓட்டு போடுங்க'ன்னு சென்னை அண்ணா சாலையிலேயே விளம்பர போர்டு வச்சிட்டாங்கன்னா பாருங்க' என அதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் இன்னும் சிலர்.
















