செய்திகள் :

Congress: மாணிக்கம் தாகூர் தலைவராக நியமனம்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்!

post image

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் செல்வப்பெருந்தகை அப்பொறுப்பில் இருந்தார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகக் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.

முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை
முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை

அதன் பிறகு, 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களைக் காங்கிரஸ் கட்சி, தி.மு.க-வுடனான கூட்டணியில் சந்தித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, த.வெ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிபந்தனையுடன் ஆதரவளித்தது. பிறகு, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான ராஜேஷ்குமாரும் விஸ்வநாதனும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

Press Release - Manickam Tagore Appointment
Press Release - Manickam Tagore Appointment

தேர்தலுக்கு முன்பிருந்தே, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் எனப் பேசப்பட்டு வந்தது. கூடிய விரைவில் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மாணிக்கம் தாகூர் புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் ... மேலும் பார்க்க

`தவெக அரசு அமைய உழைத்தவர்கள் பொறுப்புகளில் இருப்பதில் என்ன தவறு?' - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார், நாடாளுமன்ற உ... மேலும் பார்க்க

`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு' - சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; விளக்கமளித்த செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி பெயரையும் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோ... மேலும் பார்க்க

"மாணவர்கள் அனைவரும் சமம்!" - பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளி மாணவர்களுக்கு சாதி பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்" என்று கூறியிரு... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: 9 ஆண்டுகள் ஏன் கூட்டணி; இப்போது ஏன் பிரிவு? - மதிமுக விளக்கம்

இன்று சென்னை அண்ணா நகரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32-வது பொதுக்குழு நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலா... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டில் தகுதியான பலர் இருக்கையில்..!' - டெல்லி பிரதிநிதி நியமனம்; விளக்கம் கேட்கும் பிரேமலதா!

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. இவர் ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொதுச்செயல... மேலும் பார்க்க