செய்திகள் :

Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந்த பெற்றோர் உருக்கம்

post image

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார்.

முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீராம் பிழைப்பு தேடிக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே மும்பைக்கு வந்து காட்கோபர் காமராஜ் நகரில் வசித்து வருகிறார்.

முரளி நாயக் வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தனது தந்தையிடம் வீடியோ காலில் பேசி இருந்தார். ஆனால் அதற்குள் பாகிஸ்தான் தாக்குதலில் இறந்துவிட்டார்.

தனது தந்தையுடன் முரளி

முரளி தனது பெற்றோருக்கு ஒரே மகனாவார். அவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்திருந்தார்.

முரளியின் தந்தை ஸ்ரீராம் தனது மகனின் மரணம் குறித்துக் கூறுகையில், ''வியாழக்கிழமை காலை 8 மணிக்குத்தான் எங்களிடம் வீடியோ காலில் பேசினான்.

அப்போதுதான் வேலை முடிந்து வந்திருந்தான். சீருடையோடு எங்களிடம் பேசினான். மாலை 3 மணிக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்றான்.

அப்போதுதான் எங்களது மகனின் முகத்தை இறுதியாகப் பார்த்தோம். நாட்டைப் பாதுகாக்க எங்களது ஒரே மகன் வீரமரணம் அடைந்தது பெருமைதான். ஆனால் அவன் எங்களுக்கு ஒரே மகன்.

நாங்கள் கவலைப்படுவோம் என்று கருதி முரளி எங்களிடம் அவனது வேலை குறித்துத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. கடைசியாக மகர சங்கராந்தியையொட்டி மும்பைக்கு வந்து 15 நாள் எங்களுடன் தங்கிவிட்டுச் சென்றான்'' என்று தெரிவித்தார்.

ஸ்ரீராம் கூலி வேலை செய்கிறார். அவரது மனைவி ஜோதி வீட்டு வேலை செய்து வருகிறார். முரளி ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தது குறித்துக் கேள்விப்பட்டதும் முரளியின் புகைப்படத்திற்கு காட்கோபர் காமராஜ் நகர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அக்னிவீர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட முதல் பிரிவில் முரளி தேர்வு செய்யப்பட்டார். முதலில் அஸ்ஸாம் மாநிலத்திலும், அதனைத் தொடர்ந்து ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றினார்.

கடைசியாக மீண்டும் ஜம்முவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். முரளி தனது நான்கு வயது வரை மும்பையிலிருந்தார். அதன் பிறகு ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊரில் சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்து வந்தார்.

தற்போது முரளியின் பெற்றோர் ஆந்திராவில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அங்கு முரளியின் உடல் வர இருக்கிறது. அங்குதான் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெ... மேலும் பார்க்க

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க

"என்னை இடமாற்றம் செய்தவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார்" - வேதனையைக் கொட்டிய ஹைகோர்ட் நீதிபதி

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்க... மேலும் பார்க்க

Booker Prize: சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்த கன்னட எழுத்தாளர் - யார் இந்த பானு முஷ்டாக்?

எழுத்தாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக். இவர் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' என்ற சிறுகதை தொகுப்புகள... மேலும் பார்க்க

`தேர்தலில் போட்டியிட வாங்கிய ரூ.20 லட்சம் கடனுக்காக..' - பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம்

மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டத்தில் உள்ள கரோட் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் லட்சுமி பாய். இவர் கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட... மேலும் பார்க்க