செய்திகள் :

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

post image

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

யூதர்களின் விழாவான ஹனுக்கா-வை (Hanukkah) கொண்டாட கடற்கரையில் கூடியிருந்த சுமார் 1,000 முதல் 2,000 பேர் வரையிலான மக்கள் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை தரப்பில், துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு பேரில் ஒருவர் போலீஸ் அதிகாரிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாகவும், இன்னொரு நபர் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மறுபக்கம் இந்த சம்பவத்தில்,மர்ம நபர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை ஒருவர் பிடிங்கி பலரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ``பான்டியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வேதனையளிக்கிறது.

காவல்துறையினரும், அவசரகாலப் பணியாளர்களும் மக்களைக் காப்பாற்ற களத்தில் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன" என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதேவேளையில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இந்தத் தாக்குதல் குறித்து, ``ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பான்டி கடற்கரையில் ஹனுக்காவின் மெழுகுவர்த்தியை ஏற்றச் சென்ற யூதர்கள், நமது சகோதர சகோதரிகள் இழிவான தீவிரவாதிகளால் மிகவும் கொடூரமான தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்தத் தருணத்தில் இஸ்ரேலின் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. காயமடைந்தவர்கள் குணமடையவும், உயிரிழந்தவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஜெருசலேமிலிருந்து எங்களின் ஆதரவை நாங்கள் அனுப்புகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளு... மேலும் பார்க்க

ஊட்டி: மூடப்பட்ட Hindustan Photo Films தொழிற்சாலையில் மண் திருட்டு; தொடரும் அத்துமீறல்; காரணம் என்ன?

தென்னாசியாவின் முதல் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1960-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவுள்ள வன... மேலும் பார்க்க

`93 பேர் மட்டுமே வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 வாக்காளர்கள் பதிவேற்றம்?' - அலுவலர்களுக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வ... மேலும் பார்க்க

``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலை... மேலும் பார்க்க

``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல் அதிபர் புகார்

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ர... மேலும் பார்க்க