செய்திகள் :

TVK: ``விஜய் வெறுப்பு அரசியலையே உயர்த்திப்பிடிக்கிறார்" - வேலூரில் திருமாவளவன்

post image

வேலூர் வி.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``ஆளுநர் மாளிகைக்கு இதுவரை ராஜ்பவன் என்று இருந்த பெயரை இப்போது `லோக் பவன்', அதாவது 'மக்கள் மாளிகை' என மாற்றம் செய்திருப்பதை வரவேற்கிறோம்.

விஜய் கட்சியைப் பார்த்து யாருக்கும், எந்தக் கட்சிக்கும் பயமில்லை. முதன்முதலில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியபோது அவரை வரவேற்ற கட்சி வி.சி.க.தான். விஜய் கட்சி தொடங்கி 2.5 ஆண்டுகள் ஆகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

ஆனால், அவர் கொள்கை சார்ந்த அரசியலாக எதையும் பேசாமல், வெறுப்பு அரசியலையே உயர்த்திப் பிடிக்கிறார். உடனடியாக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன், ஆளும் கட்சியை விமர்சிப்பது என்பதைத் தாண்டி, வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருக்கிறார். அதனால்தான் ஜனநாயக சக்திகள் பலரும் அவருக்கு அறிவுரை - வழிகாட்டும் வகையில் கருத்துக் கூறிவருகிறார்கள்.

இதுவரை விசிக தனிநபர் விமர்சனத்தை செய்ததில்லை. அந்தக் கட்சியைக் கடுமையாக நாங்கள் விமர்சித்ததும் இல்லை. ஆனால், அவர்கள் முன்வைக்கும் அரசியலில் எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது. அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம்." எனத் தெரிவித்திருக்கிறார்.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க