செய்திகள் :

அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் - தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா?

post image

தமிழக அரசியலில் கோலோச்சிய முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் முதன் முதலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்று தெரியுமா?

திமுக-வை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலில் சட்டமன்றத்திற்குச் சென்றார்.

கலைஞர்
கலைஞர்

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் நீண்டகால முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அதே வருடத்தில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் 13 தேர்தல்களில் போட்டியிட்டு ஒருமுறை கூடத் தோல்வியைச் சந்திக்காத ஒரே தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையையும் கலைஞர் படைத்திருக்கிறார்.

மறுபுறம், தமிழக மக்களின் புரட்சித் தலைவராக உருவெடுத்த எம்.ஜி.ஆர், 1967-ஆம் ஆண்டு திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றார்.

அவரைத் தொடர்ந்து அதிமுக-வின் தலைமையேற்ற ஜெயலலிதா, 1989-ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று தனது முதல் சட்டமன்றப் பயணத்தைத் தொடங்கினார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அந்த சமயத்தில் ஜெ அணி, ஜானகி அணி என்று பிரிந்திருந்ததால் சேவல் சின்னத்தில் தான் ஜெயலலிதா போட்டியிட்டிருந்தார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், 1984-ஆம் ஆண்டு முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

அதேபோல அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் 1989-ஆம் ஆண்டு அதிமுக பிளவுபட்டிருந்த காலகட்டத்தில், ஜெயலலிதா தலைமையிலான அணியின் சார்பில் தனது சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குச் சென்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தவிர 2005 ஆம் ஆண்டு கட்சியைத் தொடங்கிய மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2006 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குச் சென்றார்.

தவெக: ``தபால் வாக்கு செலுத்துவதில் முறைகேடு நடந்திருக்கிறது" - சிடிஆர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலுக்கான பிரசாரமும் சுறுசுறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில், 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

`திமுக வெற்றிபெற உதவிய ஜெயலலிதா' - 1989 தேர்தல் களம் சொல்லும் அரசியல் | Vote Vibes

தமிழக அரசியல் வரலாற்றில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல். ஆனால், அசைக்க முடியாத சக்தியாக இருந்த அந்த இயக்கம... மேலும் பார்க்க

போப் 'இடதுசாரி' அரசியல் செய்கிறார்; கொரோனா காலத்தில் பாதிரியார்கள் கைது நடந்ததே? - ட்ரம்ப் ஆவேசம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ XIV-ஐ கடுமையாக விமர்சித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போப் லியோ "குற்றவா... மேலும் பார்க்க

'எப்படி ஹாலோகிராம் ஐடியாவை பிடிச்சீங்க?' - வாழ்த்திய தலைமை; குஷியில் கும்பகோணம் தவெக வேட்பாளர்!

தவெக சார்பில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் வினோத், ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் விஜய்யை தத்ரூபமாக நேரில் கொண்டு வந்ததை போல செய்திருந்த பிரசாரம், இணையத்தில் பயங்கர வைரலாகியிருக்கிறது.Vinothவினோத்... மேலும் பார்க்க

’உங்கள் நம்பிக்கையே என் மருந்து’ - உடல்நிலை குறித்த அப்டேட் தந்த வானதி சீனிவாசன்

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு, தேர்தல் பரப்புரையின் இடையே திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.... மேலும் பார்க்க