செய்திகள் :

இந்தியாவில் 'ஈரான் எண்ணெய்' - முன்பு நிறுத்தியதற்கும், இப்போது வாங்குவதுற்கும் ட்ரம்ப் தான் காரணம்

post image

2019-ம் ஆண்டிற்குப் பிறகு, ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது ஈரான் எண்ணெயை வாங்கி உள்ளது இந்தியா.

2019-ம் ஆண்டு, ஈரான் எண்ணெயை யாரும் வாங்கக்கூடாது என்று உலக அளவில் அழுத்தத்தைத் தந்தது அமெரிக்கா.

பொதுவாக, ஈரான் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கடுமையான நெருக்கடிகளைத் தந்து வந்தது அமெரிக்கா.

ஈரான் போர்: கச்சா எண்ணெய்
ஈரான் போர்: கச்சா எண்ணெய்

விதிவிலக்கு

இதற்கு 2019-ம் ஆண்டு வரையில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், 2019-ம்‌ ஆண்டு இந்த விதிவிலக்கும் நீக்கப்பட்டது. இதன்‌ விளைவாக, ஈரான் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது இந்தியா.

இப்போது ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது.

இதை தடுக்க, ஏற்றுமதிக்காக கப்பல்களில் இருக்கும் ஈரான் எண்ணெயை வாங்க தடை இல்லை என்று விதிமுறைகளைத் தளர்த்தி உள்ளது அமெரிக்கா.

ஆனால், புதிதாக எடுக்கப்படும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதியில்லை.

இதனால், தற்போது இந்தியா ஈரான் எண்ணெயை வாங்கி உள்ளது.

ட்ரம்ப்

இந்தச் சம்பவத்தின் ஹைலைட்டே, 2019-ம்‌ ஆண்டு இந்தியா ஈரான் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதற்கும், இப்போது இந்தியா ஈரான் எண்ணெயை வாங்குவதற்கும் ட்ரம்ப் தான் காரணம்.

ஏனெனில், இரண்டு சமயங்களிலும் ட்ரம்ப் தான் அமெரிக்காவின் அதிபர்.

ஈரான் எண்ணெய் வாங்குவதில் இந்தியா பேமெண்ட் பிரச்னையைச் சந்திக்கிறது. அதனால், ஈரான் எண்ணெய் சீனாவிற்கு சென்றுவிட்டது போன்ற தகவல்கள் வெளியாகின.

ஆனால், அது உண்மை அல்ல என்றும், ஈரான் எண்ணெய் இந்தியா வந்துவிட்டது என்றும் இந்திய பெட்ரோலியம் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

`எம்.ஜி.ஆர் வேஷம் போட்டுட்டு பிரசாரத்துக்கு காசு கேட்டா தப்பு!' - கத்தார் தொழிலதிபர் அமரன்

தேர்தல் நேரங்களில் அதிமுக மேடைகள் என்றால் அங்கே நிறைய எம்.ஜி.ஆர் களைப் பார்த்திருப்பீர்கள். எம்.ஜி.ஆர் போலவே தொப்பி, கண்ணாடி அணிந்து அவரைப் போலவே நடந்து பாட்டுப் பாடி ஆடி இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்பா... மேலும் பார்க்க

"எடப்பாடி வார்த்தையை நாங்கள் நம்பினோம், ஆனால்.!"- தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை காட்டிய பிரேமலதா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2024-ல் கையெழுத்திட்டு வழங்கிய தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பு காண்பித்திருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். திருவண்ணாமலை கோ... மேலும் பார்க்க