செய்திகள் :

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

post image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே  மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படுத்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு ரகசிய  தகவல் வந்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அது திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த ராஜூ (60) என்பவருக்கு சொந்தமான லாட்ஜ் என்பது தெரியவந்தது. அங்கு குமரி மாவட்டம்  குலசேகரத்தைச் சேர்ந்த கோகுல் (33) என்பவர், தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முன்பதிவு செய்திருந்தார். அதுகுறித்து கோகுல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அழைப்பிதழும் பதிவு செய்துள்ளார்.

போதை பார்ட்டியில் மீட்கப்பட்டவர்கள்

நேற்று நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கியது. இதில் கோவை, கேரளா, மும்பை என பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட  இளைஞர்கள் மற்றும் பெண்கள் இதில் கலந்துள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களும் அதில் கலந்துகொண்டனர். அந்த கொண்டாட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட உயர்ரக போதை பொருள்களான கஞ்சா, எம்.டி.எம், எல்.எஸ்.டி உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தனியார் ரிசார்ட்டில் நடந்த போதை பார்ட்டி

இது தொடர்பாக ரிசார்ட் உரிமையாளர் ராஜூ, பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு  அழைப்பு விடுத்த  கோகுல், அவரது மனைவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போதை பொருட்களையும் போலீசார் தேடினர். ரிசார்ட் வளாகத்தில் மண்ணில் போதைப்பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என தோண்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் போதை ஊசிகள் உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை, கேரளா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த இளம் பெண்களும் மீட்கப்பட்டனர். பிறந்தநாள் என்ற பெயரில் போதை கூடுகை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க

சேலம்: ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்ற பட்டதாரி பெண் அடித்து கொலை? - என்ன நடந்தது?

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பி.இ பட்டதாரி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடியைச் சேந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், இவரைப் பிரிந்து குழந்தையுடன், திருப்பூரில் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, தூ... மேலும் பார்க்க