செய்திகள் :

கேட்டாலே புண்ணியம்... தீய சக்திகள் விலகும்... தினமும் அவசியம் கேட்க வேண்டிய லலிதா சகஸ்ரநாமம்!

post image

ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட, வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலினீ, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாம துதிப்பாடல் வெளிப்பட்டது. அம்பிகையின் அனந்த கோடி திருநாமங்களில் ஶ்ரீலலிதா என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால் அந்த பெயரிலேயே அவள் திருநாமங்கள் 1,000 கூறும் ஸ்தோத்திரமும் உருவானது. அற்புதமான இந்தத் துதிப்பாடல், ஹயக்ரீவரால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டு, அவர் மூலம் பூவுலகுக்கு வந்துசேர்ந்தது என்கிறது புராணம். இந்த அற்புதமான ஸ்தோத்திர பாராயணத்தை வேதம் கற்றுணர்ந்த இளைஞர்களான ஷ. ஸாம்பசிவம், சு.நாகேந்திரன் சிவம், க.கைலாஷ் சிவம் ஆகியோர் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இதைக் கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் மிகுந்த புண்ணிய பலனைத் தரும். சக்தி விகடன் பார்வையாளர்கள் அனைவரும் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டுப் பார்த்துப் படித்துப் புண்ணிய பலன் அடையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

`சுவாமியே... சரணம் ஐயப்பா’ - ஐயப்ப பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய 108 சரண கோஷம் | சபரிமலை

1. சுவாமியேசரணம் ஐயப்பா2. ஹரிஹர சுதனேசரணம் ஐயப்பா3. கன்னிமூல கணபதி பகவானேசரணம் ஐயப்பா4. சக்தி வடிவேலன் ஸோதரனேசரணம் ஐயப்பா5. மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவேசரணம் ஐயப்பா6. வாவர் சுவாமியேசரணம் ஐயப்ப... மேலும் பார்க்க

வினைகள் தீர்க்கும் வேல் மாறல் பாராயணம்... படித்தாலே பலம் தரும் மந்திரம் - Vel Maral Tamil Lyrics

முருகப்பெருமானின் வழிபாட்டுக்கும் மூத்தது வேல் வழிபாடு என்கிறது வரலாறு. அதிலும் முருகப்பெருமானின் கைவேலைப் போற்றும் வேல் மாறல் மந்திரம் மனிதர்களுக்கு மருந்து போன்றது. ஒரு மருந்து நோய்களைத் தீர்ப்பதுபோ... மேலும் பார்க்க