செய்திகள் :

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

post image

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.

இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் புதின் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் புதின், “சில நேரங்களில் போட்டி என்பது மிகவும் மோசமாக மாறுகிறது.

எரிபொருள் குழாய்கள் தகர்க்கப்படுவது, சர்வதேசப் போக்குவரத்துப் பாதைகளை முடக்கிச் சரக்குக் கப்பல்களைக் கைப்பற்ற முயல்வது, சட்டவிரோதமான தடைகளை விதிப்பது போன்ற சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

அச்சுறுத்தல்

அதுமட்டுமின்றி, மற்றவர்களின் சுயநலத்தை ஏற்க மறுத்து, சொந்த நலனில் அக்கறை காட்டும் நாடுகளுக்கு எதிராக, ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ என்ற பெயரில் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன.

உலகின் அனைத்து நாடுகளின் மீது விதிக்கப்பட்ட மொத்தத் தடைகளை விட இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது 30,000-க்கும் மேற்பட்ட தடைகள் ரஷ்யா மீது மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட சவாலான பின்னணியிலும், ரஷ்யா தீவிரமாகச் செயல்பட்டுப் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது.

நாங்கள் எங்களது தேசிய இறையாண்மையை மேலும் பலப்படுத்தியுள்ளோம். நம்பிக்கையான தோழமை நாடுகளுடன் உறவுகளை வளர்த்து வருகிறோம்.

கடந்த 3 ஆண்டுகளில், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி உலகச் சராசரியை விட மிகச் சிறப்பாகவே இருந்துள்ளது” என்று ட்ரம்பை மறைமுகமாக சாடுவதுபோலப் பேசினார்.

கூடவே, “கடந்த 5 ஆண்டுகளில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கை பிரிக்ஸ் நாடுகளே உருவாக்கியுள்ளன.

ஆனால், ‘ஜி7’ (G7) அல்லது ‘க்ரேட் 7’ என அவர்களை ஏன் அப்படி அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நாடுகளின் பங்களிப்போ வெறும் 29 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.

அதே காலகட்டத்தில் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பார்த்தோமேயானால், அதில் பாதியளவிற்கும் அதிகமான வளர்ச்சிக்கு பிரிக்ஸ் நாடுகளே காரணமாக இருந்துள்ளன. அதேவேளையில் ஜி7 நாடுகளின் பங்களிப்பு வெறும் 18 சதவீதம் மட்டுமே.

பிரிக்ஸ்
பிரிக்ஸ்

ஏன் இந்த நிலை? காரணம் மிகவும் எளிது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக பிரிக்ஸ் நாடுகளில்தான் வாழ்கிறார்கள்.

அதனால்தான், பிரிக்ஸ் நாடுகள் அளப்பரிய ஆற்றலும் துடிப்பும் கொண்ட உள்நாட்டுச் சந்தைகளைக் கொண்டுள்ளன” என்று பேசியிருக்கிறார்.

ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க

’வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற பிடிவாதம் ஆபத்தில் முடியும்’–வானதி சீனிவாசன்!

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, பட்டினப்பாக்கம், கடற்கரையையொட்டி, 25.55 ஏக்கரில், ரூ.1,200 கோடியில், தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்படும் ... மேலும் பார்க்க