செய்திகள் :

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

post image

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்துள்ளார் . முன்னதாக நள்ளிரவிலேயே சைக்கிளில் வந்து வீட்டின் முன் வராண்டா பகுதியில், தனது முகம் தெரியாத அளவுக்குத் துணியால் முகம் முழுவதும் முகமூடி அணிந்தபடி பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர், மூதாட்டியின் கண்களைத் தனது கையால் பொத்தி, அவர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் கம்மலைப் பறிக்க முயன்றுள்ளார். உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி மகேஸ்வரி உரத்துக் கூச்சலிட்டதுடன் மட்டுமல்லாமல், கொள்ளையனின் முகத்தில் வீட்டில் சொம்பில் இருந்த தண்ணீரை ஊற்றித் தாக்கி விரட்டியடித்துள்ளார். தனது முகத்தில் ஆசிட் போன்ற திரவம்தான் ஊற்றப்பட்டதோ என்று பயந்து பதறிப்போன முகமூடி கொள்ளையன், தலை தெறிக்க அங்கிருந்து சைக்கிளை விட்டுவிட்டு ஓடி மறைந்தான்.

திருடனை விரட்டும் மூதாட்டி
திருடனை விரட்டும் மூதாட்டி

இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களும் மூதாட்டியின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காட்சிகளில், நள்ளிரவில் சைக்கிளில் வந்த முகமூடி கொள்ளையன் வீட்டின் வராண்டாவில் பதுங்கியிருப்பது, அதிகாலையில் மூதாட்டி வாசல் பகுதியைச் சுத்தம் செய்யும்போது திடீரென பின்னால் இருந்து தாக்குவது, மூதாட்டி கூச்சலிட்டு எதிர்த்து தண்ணீரை ஊற்றுவது, பயந்து ஓடும் கொள்ளையன் ஆகிய காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு, தப்பியோடிய முகமூடி கொள்ளையனை வலைவீசித் தேடி வருகின்றனர்.

கொள்ளையன் விட்டுச்சென்ற சைக்கிளை பறிமுதல் செய்தனர். அந்தச் சைக்கிள் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சுற்றுப்புறத்தில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையன் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எந்த வழியாகத் தப்பி ஓடினார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருடனை விரட்டும் மூதாட்டி
திருடனை விரட்டும் மூதாட்டி

இதுபோன்று அதிகாலை நேரங்களில் தனியாக வசிக்கும் முதியவர்களை குறிவைத்துத் திருடர்கள் செயல்படுவது சிவகாசி பகுதியில் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாலை நேர வேளையில் தூக்கக் கலக்கத்திலும்கூட சுதாரித்துக்கொண்டு, துணிச்சலுடன் தனியாளாக முகமூடி கொள்ளையனை ஒரு செம்புத் தண்ணீரால் விரட்டியடித்த மூதாட்டி மகேஸ்வரியை காவல்துறையினர் உள்பட அனைவரும் பாராட்டினர்.

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க

சேலம்: ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்ற பட்டதாரி பெண் அடித்து கொலை? - என்ன நடந்தது?

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பி.இ பட்டதாரி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடியைச் சேந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், இவரைப் பிரிந்து குழந்தையுடன், திருப்பூரில் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, தூ... மேலும் பார்க்க

ஆந்திரா டூ நெல்லை; ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தலில் சிக்கிய மகன்; தந்தை தற்கொலை; நடந்தது என்ன?

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்கிய போதை வஸ்துவான கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீஸாரும் இதனைத் தடுக்க முயன்று வருகின்றனர்.இந்த நிலையில், கடந்த 6-ம் த... மேலும் பார்க்க