செய்திகள் :

பழனி: திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

post image

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை நடைபெற்றது‌. கடந்த 4ம்தேதி அதிகாலை கணபதி வழிபாட்டுடன் முதல்காலை யாகசாலை பூஜை தொடங்கியது.

இன்று அதிகாலை 6ம்கால யாகவேள்வி நடைபெற்றது. 21 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, நன்மங்கள இசை, தேவாரம், திருவாசகம், கந்தபுராணம் ஆகியவை ஓதுவார்களால் இசைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை வேள்விகள் நடைபெற்றது.

திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்

தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு ஆறாம் கால யாக வேள்வி தொடங்கியது. இன்று அதிகாலை புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூலவரான அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கருவறை விமானம், இராஜகோபுரம் கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது‌.

தொடர்ந்து திருச்சுற்று தெய்வங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.45 மணியளவில் மூலவர் அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி இன்று நடைபேற்ற கும்பாபிஷேக நிகழ்வினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம்

இந்நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , பழனி சட்டமடன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்: பஞ்சபூதத்தலங்களில் மண் தலம்; 3,500 ஆண்டுகள் பழைமையான மாமரம்!

புண்ணியம் தரும் ஏழு நகரங்களில் காஞ்சிபுரமும் உண்டு. கோயில் நகரம் என்று போற்றப்படும் காஞ்சி நகரத்தில் திரும்பிய திசை எங்கும் கோயில்களைக் காணலாம். தராசில் உலகத்தின் புண்ணிய க்ஷேத்ரங்களை எல்லாம் ஒரு தட்ட... மேலும் பார்க்க

ஆன்மிக வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் புகைப்படத் | தொகுப்பு-1

ஏகாம்பரநாதர் கோவில்ஏகாம்பரநாதர் கோவில்காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்நடவாவி கிணறுநடவாவி கிணறுநடவாவி கிணறுசஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவில்சஞ்சீவி ர... மேலும் பார்க்க

திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!

'எல்லாம் என் தலையெழுத்து' என்று பலரும் கஷ்ட காலத்தில் புலம்புவதைக் கேட்டிருப்போம். பிரம்மன் எழுதிய எழுத்தின்படிதான் நம் வாழ்க்கை நடக்கிறது என்பதுதான் ஆழ்ந்த நம்பிக்கை. அந்தத் தலையெழுத்தை மாற்றவேமுடியா... மேலும் பார்க்க

கும்பகோணம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருக்கோயில்: மன்னர் ராஜராஜனின் குலதெய்வக் கோயில் இதுதான்!

திருவலஞ்சுழிநாதர்காவிரி நதியின் கரையில் பல்வேறு தேவாரத் தலங்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்புவாய்ந்தவை. காவிரியாலேயே பெயர்பெற்றதும், காவிரிநதி தோன்றியது குறித்த சரிதத்தை உடையதுமான திருத்தல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம், இளையனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில்: பங்குனியிலும் சூரசம்ஹாரம் நடைபெறும் தலம்!

முருகப்பெருமான் ஆலயங்களில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அப்போது ஆறாம்நாள் சஷ்டி திதி அன்று சூரசம்ஹாரம் நடைபெறும். அதேபோன்று பங்குனி மாதத்திலும் சூரசம்ஹாரம் நடைபெறும் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா –பக்தர்கள் சாமி தரிசனம்

குடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக... மேலும் பார்க்க