செய்திகள் :

மறைந்த கணவர் தர்மேந்திராவிற்கு டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டம் - ஹேமமாலினி

post image

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாத இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் தனது 89வது வயதில் காலமான நிலையில் தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் இணைந்து கடந்த மாதம் 27ம் தேதி மும்பையில் பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில் ஹேமமாலினியோ அல்லது அவரது மகள்களோ கலந்து கொள்ளவில்லை.

தர்மேந்திராவின் பிரார்த்தனை கூட்டதில் கலந்துகொண்டவர்கள் ஹேமமாலினியின் வீட்டில் நடந்த பிரார்த்தனையிலும் கலந்துகொண்டனர். டிசம்பர் 8ம் தேதி தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள். இதையடுத்து சன்னி தியோலும், அவரது சகோதரர்களும் சேர்ந்து தர்மேந்திராவின் பிறந்தநாளை அவரது ரசிகர்களுடன் கொண்டாடினர். நடிகை ஹேமமாலினி தனது கணவரின் 90வது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளபக்கத்தில் பிரத்யேகமாகப் பதிவிட்டிருந்தார்.

தர்மேந்திரா - ஹேமமாலினி

அதில், ``தர்மா ஜி எனது அன்பு இருதயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் எங்களை விட்டுச்சென்று இரண்டு வாரங்கள் ஆகின்றன. அதிலிருந்து படிப்படியாக நாங்கள் மீண்டு வருகிறோம்.

நாம் இவ்வளவு நாட்களும் இணைந்து வாழ்ந்ததற்காகவும், நமது அன்பின் அடையாளமாக அழகான இரண்டு குழந்தைகள் கொடுத்ததற்கும் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது அழகான நினைவுகள் என்றைக்கும் எனது இதயத்தில் இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது டெல்லியில் தனது அரசியல் நண்பர்களுக்காக தர்மேந்திராவிற்கு பிரார்த்தனை கூட்டத்திற்கு ஹேமமாலினி ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்தில் ஹேமமாலினியோடு அவரின் மகள்கள் இஷா தியோல், அஹானா மற்றும் அவர்களின் கணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

11ம் தேதி மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. முன்னதாக ஹேமமாலினி தன் கணவரின் நினைவாக தன் வீட்டில் கீதை வாசிப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். தர்மேந்திராவிற்கு புனே அருகே பண்ணை வீடு இருக்கிறது. அந்த பண்ணை வீட்டை தர்மேந்திராவின் ரசிகர்களுக்கு திறந்துகாட்ட அவரின் மகன்கள் முடிவு செய்துள்ளனர்.

`ஒரே வீட்டில் இரண்டு சமையல்'- உணவில் வெங்காயம் பூண்டு சேர்க்காத மனைவி; விவாகரத்தில் முடிந்த பிரச்னை!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவர் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கேசவ் மனைவி உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் பயன்படுத்தாமல் சமையல் செய்ய ஆரம்பித... மேலும் பார்க்க

விமானத்தின் கழிப்பறை தண்ணீரே இல்லாமல் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?!

வீட்டில் நாம் பயன்படுத்தும் டாய்லெட்டில் தண்ணீர் தான் கழிவுகளை அடித்துச் செல்லும். விமானத்தில் தண்ணீர் இல்லை மாறாக காற்று தான் அந்த கழிவுகளை எடுத்துச் செல்கிறது. காற்று எப்படி கழிவுகளை எடுத்துச் செல்ல... மேலும் பார்க்க

பழைய கர்சீஃப்களை வைத்து இப்படியொரு சட்டையா? - இணையத்தை கலக்கும் ‘விண்டேஜ்’ டிசைன்!

ஃபேஷன் என்ற பெயரில் பல்வேறு விஷயங்களை செய்துவருகின்றனர். பழைய காலத்து ஆடைகளை நவீனமாக மாற்றுவதும், வித்தியாசமான பொருட்களை வைத்து ஆடைகளை வடிவமைப்பதும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், கைக்குட்... மேலும் பார்க்க

``வழுக்கை தலையில் முடி வளர மருந்து, சோதனையில் நல்ல பலன்'' - அயர்லாந்து மருந்துக் கம்பெனி சொல்வதென்ன?

ஆண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கையாக மாறுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு 70 வயதான பிறகும் முடி உதிர்ந்திராதிருக்கலாம். ஆனால் சிலருக்கு 20 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கையாகி இருப்பார... மேலும் பார்க்க

நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் - அடடே லவ் ஸ்டோரி

சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில்... மேலும் பார்க்க