செய்திகள் :

"அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால் மலையாள..!"- பாலிவுட் குறித்து பிரித்விராஜ்

post image

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் கலந்துகொண்டிருக்கிறார்.

அப்போது அவரிடம் பாலிவுட் திரையுலகம் மலையாள திரையுலகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்று கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " பாலிவுட்டுடன் ஒப்பிடும்போது எங்களின் சுமை மிகவும் குறைவு. மலையாளப் படங்கள் இப்போதெல்லாம் 15 நாள்களில் படப்பிடிப்பை நடத்தி 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதில்லை.

பிரித்விராஜ்
பிரித்விராஜ்

மாறாக நாங்களும் 150 நாள்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தி, 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான படங்களை உருவாக்குகிறோம்.

பெரிய படங்களை எடுக்க முயற்சி செய்தாலும் மலையாளப் படங்கள் எடுக்கப்படும் விதத்தில் ஓர் எளிமையும் இயல்பும் இருக்கிறது. அந்த அணுகுமுறைதான் நாங்கள் எடுக்கும் சினிமாவிற்கு ஓர் உண்மையான மனித உணர்வைக் கொண்டுவருகிறது.

ஓர் இயக்குநராக நான் கரீனாவுடன் இணைந்து படம் பண்ண விரும்பினால், அவருக்கு நேரடியாகவே போன் செய்து, 'ஹாய், உங்களுடன் ஒரு படம் பண்ண விரும்புகிறேன். கதையைக் கூறட்டுமா?' என்று கேட்பேன். அதற்கு அவர், 'நான் அடுத்த மாதம் வெளியூர் பயணத்தில் இருக்கிறேன், வேறு ஒரு நாள் சந்திக்கலாம்' என்று கூறுவார்.

ஆனால் பாலிவுட்டில் நிலைமை வேறு. நீங்கள் முதலில் ஏஜென்சியை தொடர்பு கொள்ள வேண்டும், அவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேனேஜரிடம் பேசுவார்கள். பிறகு அந்த மேனேஜர் இயக்குநரைச் சந்திக்க உங்களைச் சம்மதிக்க வைப்பார்.

நடிகர் பிரித்விராஜ்

அப்படி இணைந்து பணியாற்றச் சம்மதித்த பிறகு, ஏஜென்சி ஒரு பெரிய சம்பளத்தைக் கேட்கும். அதற்குத் தயாரிப்பு நிறுவனம் அதில் பாதியை மட்டுமே தருவதாகச் சொல்லும். அதன்பின்தான் பேச்சுவார்த்தையே தொடங்கும்.

பாலிவுட்டில் எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது. ஆனால் விஷயங்களைச் செய்ய இதைவிட எளிமையான வழியும் இருக்கிறது என்பதுதான் என் கருத்து" என்று கூறியிருக்கிறார்.

Sreenath Bhasi: "மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறேன்!" - நடிகர் ஶ்ரீநாத் பாஸி

'கும்பளங்கி நைட்ஸ்', 'பீஷ்ம பர்வம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, தனது மனைவி ரீது ஜக்காரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதை பற்றித் தெரிவித்... மேலும் பார்க்க

"அந்த அனுபவத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் மீண்டும் பணியாற்ற முடியாது.!" - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த 'King of Kotha' படத்தின் அனுபவம் மற்றும் ட்ரோலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘King of Kotha’ படம் வெளியாகுவதற்கு முன்ப... மேலும் பார்க்க

Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்

நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிற... மேலும் பார்க்க

Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" - அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியை வைத்து ‘பாதயாத்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார். 2016-இல் வெளியான ‘பின்னையும்’ திரைப்படத்திற்குப் பிறகு இ... மேலும் பார்க்க

Mohanlal: "நான் மோகன்லாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொன்னப்போ..." - சுசித்ரா மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகி... மேலும் பார்க்க

Premalu: "யாராலும் அப்படியே ரீமேக் செய்யவே முடியாது!"- 'பிரேமலு' இந்தி ரீமேக் பற்றி இயக்குநர் கிரிஷ்

மலையாளத்தில் ஹிட் அடித்த 'பிரேமலு' திரைப்படம், தற்போது 'பிரேம் கீட்டனு' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. Bethlehem Kudumba Unit வீர் பஹாரியா நாயகனாக நடிக்கும் இந்தப் படம் அக்டோபர் ... மேலும் பார்க்க