செய்திகள் :

அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ & சாட் - இளம்பெண் பாலியல் புகாரால் தலைமறைவான பாலக்காடு காங்கிரஸ் MLA

post image

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாலக்காடு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் வடகரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனதைத்தொடர்ந்து கடந்த நவம்பரில் நடந்த பாலக்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ராகுல் மாங்கூட்டத்தில் எம்.எல்.ஏ ஆனார்.

இதனிடையே திருமணம் செய்துகொள்வதாக இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்து கர்ப்பமாக்கியதாக ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக இளம் பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். தன்னை கர்ப்பமாக்கியதுடன், கருவை கலைக்கும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இளம் பெண் கூறிய குற்றச்சாட்டு சம்பந்தமான போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் அந்த சமயத்தில் வெளியானது.

மேலும், நடிகை ரினி ஆன் ஜார்ஜ், ஒரு திருநங்கை உள்ளிட்டோரும் பாலியல் புகார் கூறினர். அந்த புகார்களை முதலில் மறுத்த ராகுல் மாங்கூட்டத்தில், நெருக்கடி முற்றியதால் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ராஜினாமா செய்தார்.

பாலியல் வன்கொடுமை

இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக மற்றொரு ஆடியோ மற்றும் வாட்ஸ் அப் சாட் ஆகியவை சில நாட்களுக்குமுன் வெளியாகியது.

`கர்ப்பிணி ஆக தயாராக இருக்கும்படி’ ராகுல் மாங்கூட்டத்தில் கூறுவது வாட்ஸ் அப் சாட்டில் இடம் பெற்றிருந்தது. அந்த ஆடியோவில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுவதுடன், கடுமையான உடல் நலப்பிரச்னையால் அவதியுறுவதாகவும் இளம் பெண் கூறுவதும் பதிவாகியிருந்தது.

அதே சமயம் இது புதிய ஆடியோ அல்ல எனவும், தனக்கு தெரிவிக்க வேண்டியதை விசாரணையின்போது கோர்ட்டில்  கூறுவேன் எனவும் ராகுல் மாங்கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் நேற்று முதல்வர் அலுவலகத்துக்கு நேரில் சென்று டிஜிட்டல் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதையடுத்து திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி கே.எஸ்.சுதர்சன் அந்த இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார்.

பாலக்காடு எம்.எல்.ஏ ராகுல் மாங்கூட்டத்தில்

பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பத்தை கலைக்க வலியுறுத்தியதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் இளம் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முன் ஜாமின் பெறும் முயற்சியில் ராகுல் மாங்கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

காங்கிரஸில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தாலும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ராகுல் மாங்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வந்தார். நேற்று பாலக்காடு தொகுதிக்குட்பட்ட கண்ணாடி என்ற பகுதியில் ராகுல் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தபோது தான் இளம் பெண் புகார் அளித்த தகவல் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து மொபைல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

பாலக்காடு எம்.எல்.ஏ அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. ராகுல் மாங்கூட்டத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாலக்காடு எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ராகுல் மாங்கூட்டத்தில் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் எந்த குற்றமும் செய்யவில்லை. மக்கள் நீதிமன்றத்தில் உண்மையை தெளிவுபடுத்துவேன்" என தெரிவித்துள்ளார்.

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க

``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகு... மேலும் பார்க்க

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறி... மேலும் பார்க்க