நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? - கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி...
IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?
உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி.
சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன?
தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சி.எஸ்.கே. அணியின் திட்டம் என்ன?

2019க்கு முன்பு வரைக்கும் தோனி இந்திய அணியின் போட்டி அட்டவணைகளைப் பொறுத்து இந்திய அணிக்காக ஆடிவிட்டு ஐ.பி.எல்லுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வருவார். 2019க்குப் பிறகு தோனி சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை.
சென்னை வந்த தோனி
அதன்பிறகு எப்போதுமே ஒவ்வொரு சீசனின் போதுமே சரியாக ஒரு மாதம் முன்பாகவே தோனி சென்னைக்கு வந்துவிடுவார்.
அவரின் வருகையைப் பொறுத்துதான் சென்னை அணியின் பயிற்சி செஷன்களும் திட்டமிடப்படும்.
ராஞ்சியில் முதற்கட்டமாக சில நாட்கள் பயிற்சி எடுக்கும் தோனி, சென்னையிலும் வந்திறங்கியவுடன் முதல் நாளின் பயிற்சி செஷனிலிருந்தே பயிற்சியையும் தொடங்கிவிடுவார். அதே டெம்ப்ளேட்தான் இந்த முறையும்.

வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே
மூன்று நாட்களுக்கு முன்பாக தோனி சென்னைக்கு வந்திறங்கிவிட்டார். தோனியை வரவேற்கும் விதத்தில் சென்னை அணியும் ஒரு மாஸான வீடியோவை வெளியிட்டிருந்தது.
தோனியுடன் ருத்துராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் உட்பட 10க்கும் மேற்பட்ட வீரர்களும் சென்னை அணியின் முகாமில் இணைந்துவிட்டனர்.
ஷூட்டிங்
சஞ்சு சாம்சன் போல சர்வதேச அணிகளுக்காக ஆடி வரும் வீரர்களும் உலகக்கோப்பை முடிந்தவுடன் பயிற்சி முகாமில் இணைந்து விடுவார்கள்.
நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் தோனி சில நாள்களை போட்டோஷூட்டுக்கும் சில நாள்களை விளம்பரப் படங்களின் ஷூட்டுக்கும் எஞ்சியிருக்கும் நாள்களில் ஸ்பான்சர்களுக்காக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் எனத் தகவல் சொல்கின்றனர் சிஎஸ்கே வட்டாரத்தினர்.

இம்பாக்ட் ப்ளேயராக தோனி
பகல் நேரங்களில் மற்ற கமிட்மெண்ட்களை முடிக்கும் தோனி, மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் நாவலூரில் உள்ள சிஎஸ்கேவின் இன்னொரு மைதானத்தில் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வரவிருக்கும் சீசனில் தோனி முழுமையாக ஆடமாட்டார். இம்பாக்ட் ப்ளேயராக வேண்டுமானால் வருவார் எனத் தகவல்கள் வருகின்றன.
ஆனால், நாவலூர் மைதானத்தில் தோனி மிகத் தீவிரமாக வழக்கம் போல பேட்டிங் பயிற்சியில்தான் ஈடுபட்டு வருகிறார்.
ஆக, தோனி என்ன ரோலில் ஆடப் போகிறார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எதுவாக இருந்தாலும் முடிவு தோனி எடுப்பதுதான்.
சென்னை அணியின் முன்னாள் வீரர்களான அஷ்வினையும் ரெய்னாவையும் பயிற்சியாளர் குழுவில் இணைக்கும் மனநிலையிலும் சென்னை அணியின் நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

புது ஜெர்சியோடு, புது எனர்ஜியோடு கலக்க சென்னை வீரர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை முகாமிலிருந்து அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்கள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.




















