அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; "அவர் ஒரு சூப்பர் ஸ்டார்" - இந்திய மாணவி...
Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?
ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும்.
இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது...
"ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம்.

அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது.
חיל-האוויר בהכוונה מדויקת של אמ״ן, תקף במהלך הלילה מבני שלטון ביטחוניים בתוך מתחם ההנהגה של משטר הטרור האיראני בלב טהרן.
— Israeli Air Force (@IAFsite) March 3, 2026
בתקיפת המתחם, הוטלו חימושים רבים על לשכת הנשיאות ומבנה המועצה העליונה לביטחון לאומי. בנוסף, הותקף מתחם ההתכנסות של הפורום הבכיר ביותר של המשטר, האחראי על… pic.twitter.com/8Ffur9wvd8














