செய்திகள் :

அதிருப்தி திமுக, திணறும் தேமுதிக; உற்சாக அதிமுக - குடியாத்தம் தொகுதி களம் எப்படி?

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனித்தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராக பரிதா புருஷோத்தமன் களமிறங்கியுள்ளார். இவர், அ.தி.மு.க-வில் பேரணாம்பட்டு ஒன்றிய இணைச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 2021 தேர்தலின்போதும், அ.தி.மு.க சார்பாக பரிதா புருஷோத்தமன் போட்டியிட்டார். அப்போது, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவருக்கான வெற்றி வாய்ப்பு தவறியது. இந்த முறை குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதால், தெம்போடு களம் காண்கிறார் பரிதா புருஷோத்தமன்.

பரிதா புருஷோத்தமன்

பேரணாம்பட்டு லயன்ஸ் கிளப் தலைவர், பெண்களுக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பான இன்னர்வீல் துணைத் தலைவர் என தொகுதி மக்களிடம் பழக்க வழக்கத்தில் இருக்கும் பரிதா எம்.ஏ பொருளாதாரம் மற்றும் எம்.எட் முதுகலைப் பட்டம்பெற்றவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பேசக்கூடியவர். களத்தில், தனக்கான வரவேற்பு பிரகாசமாக இருப்பதால், பரிதா புருஷோத்தமன் உற்சாகமாக மக்களைச் சந்தித்து வருகிறார்.

எதிர்முனையில், தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை தி.மு.க நேரடியாகப் போட்டியிட்டதால், களம் கடுமையாக இருந்தது. `இந்த முறை அப்படியிருக்க வாய்ப்பில்லை’ என உடன்பிறப்புகளே பொருமித்தள்ளுகிறார்கள். தே.மு.தி.க சார்பாக பிரதாப் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். காட்பாடி கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் குடியாத்தம் தொகுதி மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்.

தே.மு.தி.க-வுக்கு குடியாத்தம் தொகுதிக்குள் மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலேயே கட்டமைப்புக் கிடையாது. பிரதாப்பின் பின்னணியும் `ரியல் எஸ்டேட்’ தொழில் செய்கிறார் என்பதை தவிர, மக்களைக் கவரும் வகையில் சொல்ல ஒன்றுமில்லை.

பிரதாப்

தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ அமலு விஜயன், மாவட்ட துணைச் செயலாளர் பிரபாத் குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன் என பலரும் சீட் எதிர்பார்த்திருந்த நிலையில், தே.மு.தி.க-வுக்குத் தொகுதி தாரைவார்க்கப்பட்டதால் உடன்பிறப்புகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும், முன்பின் தெரியாத கூட்டணி கட்சி நபருக்காக நாம் ஏன் களப்பணி செய்ய வேண்டும்? என்றும் ஒதுங்கி நிற்கின்றனர். இதனால், செய்வதறியாமல் திணறிப்போய் இருக்கிறார் பிரதாப்.

இதனால் இலை தரப்பு உற்சாகமாக களத்தில் வலம் வருகிறதாம்.

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க