செய்திகள் :

காட்டி கொடுத்த டாட்டூ, மதுபாட்டில்: உறவுக்கு தடையாக இருந்ததால் காதலன் மூலம் கணவனை எரித்துகொன்ற மனைவி

post image

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருக்கும் சையான் என்ற இடத்தில் கடந்த ஒன்றாம் தேதி முகம் எரிந்த நிலையில் அடையாளம் காணமுடியாத ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த நபரின் உடலை மீட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அவரது கையில் இருந்த ஒரு டாட்டூ அவரை யார் என்று அடையாளம் காட்டியது. கொலை செய்யப்பட்டவர் பெயர் லோகேந்திரா என்று தெரிய வந்தது. லோகேந்திராவை காணவில்லை என்று கூறி அவரது சகோதரரும் போலீஸில் புகார் கொடுத்து இருந்தார்.

லோகேந்திரா

எரித்து கொலை செய்யப்பட்ட இடத்தில் சில மது பாட்டில்களும், சில பேப்பர்களும் கிடந்தது. அதனை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதோடு அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். குற்றம் நடந்த இடத்தில் கிடந்த மது பாட்டில்களில் கியூ.ஆர். கோடு இருந்தது. அந்த கோடை பயன்படுத்தி அது எங்கிருந்து வாங்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து அதனை யார் வாங்கினர் என்ற விபரத்தை கண்காணிப்பு கேமரா மூலம் தெரிந்து கொண்டனர். அதோடு சம்பவ இடத்தில் இருந்த மொபைல் போன் சிக்னல்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட லோகேந்திராவின் மனைவி மற்றும் மனைவியின் நண்பர் மகேஷ் ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இது குறித்து ஆக்ரா துணை கமிஷனர் ஆதித்ய குமார் கூறுகையில்,''மகேஷ் லோகேந்திராவின் மனைவியுடன் நீண்ட நாட்களாக திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இது சமீபத்தில் லோகேந்திராவிற்கு தெரிய வந்தது. உடனே அவர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காதலர்கள் இருவரும் லோகேந்திராவை கொலை செய்ய திட்டமிட்டனர்.

லோகேந்திரா காணாமல் போன அன்று லோகேந்திரா தனது வீட்டை விட்டு வெளியில் சென்றதும், அவரது மனைவி தனது காதலன் மகேஷுக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மகேஷ் லோகேந்திராவை சந்தித்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்களுடன் மகேஷ் நண்பர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். மூவரும் சேர்ந்து தோட்டம் ஒன்றில் அமர்ந்து மது அருந்தினர்.

அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தபோது மகேஷும் அவரது நண்பரும் சேர்ந்து லோகேந்திராவை கழுத்தை நெரித்தனர். லோகேந்திரா மயங்கியவுடன் அவர் மீது பெட்ரோல் ஊற்றினர். அதோடு கோதுமை வைக்கோலை எடுத்து போட்டு தீவைத்துவிட்டு சென்றுவிட்டனர். இக்கொலைக்காக தற்போது லோகேந்திராவின் மனைவி, மகேஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

`கிட்னி மோசடி புகாரில் பிக்பாஸ் ஜூலி; ஆதாரங்கள் போலிஸில்.!' - அதிர்ச்சி தகவலின் பகீர் பின்னணி

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலியைத் தொடர்புபடுத்தி எழுந்துள்ள கிட்னி மோசடி புகார் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மது... மேலும் பார்க்க

சென்னை: வங்கியில் வேண்டுமென்றே 1,156 கிராம் நகைகளை தவறவிட்ட முன்னாள் பெண் ஊழியர் - அதிர்ச்சி பின்னணி

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளராக அகமது காதிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், 05.12.2025-ம் தேதி பணியிலிருந்தபோது மணிபர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே அதை எடு... மேலும் பார்க்க

மகனைக் காப்பாற்ற `நரபலி' கொடுக்கப்பட்ட மகள் - ரத்தத்தை எடுத்து சடங்கு... அதிரவைத்த தாய்!

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசரிபாக் பகுதியில் பெண் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்பெண், உடல் நலமில்லாத தன்னுடைய மகனைக் காப்பாற்ற சொந்த மகளை நரபலி கொடுத்துள்ளார். ரேஷ்மி... மேலும் பார்க்க

ரூ.80 லட்சம் சம்பளம், ரகசிய திருமணம், ஏ.ஐயால் பறிபோன வேலை: கணவர் தற்கொலையால் மனைவியும் விபரீத முடிவு

பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாப்ட்வேர் தம்பதி ஒன்று தற்கொலை செய்து கொண்டது. பெங்களூருவில் உள்ள கோதனூர் என்ற இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பானு ரெட்டி(32), பிபி ஷா... மேலும் பார்க்க

அம்பேத்கர் சிலை அவமதிப்பு; கிருஷ்ணகிரியில் பரபரப்பு; காவல்துறை தீவிர விசாரணை

அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தால்​ கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டுமென்று மக்கள் போராட்டத்தில்... மேலும் பார்க்க

சென்னை: டெல்லி நபரைச் சந்திக்க வந்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக பெண் நிர்வாகிகள்- போலீஸில் புகார்!

நாமக்கல் மாவட்டம், பாப்பம்பாளையம், கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோகில் ஆனந்தம் (45). இவர். பா.ஜ.க-வின் சமூக ஊடகப் பிரிவில் நாமக்கல் மேற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழ... மேலும் பார்க்க