செய்திகள் :

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" - மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

post image

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார்.

"பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மிகவும் இழிவான கருத்துகளைத் தெரிவிக்கும் பின்னணி கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது? ஒரு பெண்ணின் உடை, அவரது தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன?" ஆதங்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வைரல் வீடியோவுக்குச் சம்பந்தப்பட்ட மலேசிய பெண் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வீடியோவைப் பார்த்து அமைச்சர் இப்படி ஒரு டிரஸ் போடலாமா? என்று கேட்டிருக்கிறார்கள்.

அந்த வீடியோவில் இருக்கும் நபர் நான்தான். அமைச்சர் கிடையாது. அந்த வீடியோவிற்குக் கீழ் அநாகரிகமாக கமென்ட்ஸ் பண்ணவர்களாக இருக்கட்டும், ட்ரோல் பண்ணவர்களாக இருக்கட்டும் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.

அதனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தேன். இந்த வீடியோ வைரலாகி என்ன ஆகப்போகிறதோ என்று பயமாக இருந்தது.

சம்பந்தப்பட்ட மலேசிய பெண் விளக்கம்
சம்பந்தப்பட்ட மலேசிய பெண் விளக்கம்

ஆனால் என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது. நான் நாகரிகமாக டிரஸ் அணியவில்லை என்று கமென்ட் செய்திருக்கிறார்கள். அப்படி என்ன நாகரிகமற்று நான் டிரஸ் அணிந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

போலிஸிடம் கம்ப்ளைன்ட் செய்திருக்கிறேன். இந்தியாவில்தான் அந்த வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு இருக்கிறது. இப்போது வரை பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

வேலை தேடி வந்த இடத்தில் காதல்; எதிர்ப்பால் திருமணத்தை ரத்து செய்த தன்பால் ஈர்ப்பாளர்களான தோழிகள்

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அதுபோன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸாகப் பணியா... மேலும் பார்க்க

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்எல்ஏ-க்கள்?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முக்கியமான விவாதங்களின்போது ஆப்செண்ட் ஆகிவிடுவதால் திமுக எம்.எல்.ஏக்களே அதிர... மேலும் பார்க்க

புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்'; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கு ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.சட்டப்பேரவையில் அவர் வாசித்த பட்ஜெட் உரையில், `தினக்கூலி அடிப்படையில் பணிபுரி... மேலும் பார்க்க

ஆரணி: காதலிக்காகக் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை... சீரமைத்து புத்துயிர் கொடுத்த தமிழ்நாடு அரசு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது `கண்ணாடி மாளிகை’ எனப் பெயர் பெற்ற பிரமாண்ட அரண்மனை. சுமார் 200 ஆண்டு... மேலும் பார்க்க

"தடைகள் வருவது தெரியும்; அதற்காகவே ஈரான் தயார் செய்த திட்டம்!" - ஈரான் சொல்லும் பிளான் என்ன?

ஈரானுடன் பொருளாதார ரீதியாக இணைந்திருக்கும் நாடுகள் அமெரிக்காவின் இரண்டாம் கட்டப் பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கக்கூடும் என்று நேற்று அமெரிக்காவின் நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்... மேலும் பார்க்க