செய்திகள் :

'அப்செட் அமித் ஷா' ; எடப்பாடியின் கறார் பேட்டியும் மாபெரும் சவாலும்! - டெல்லி விசிட்டின் பின்னணி

post image

50 ஆண்டுகளாக தேர்தலில் கைகொடுக்கும் `பிரம்மாஸ்திரம்' - எடப்பாடி ஸ்கெட்ச்; சமாளிப்பாரா ஸ்டாலின்?'ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா மூவரையும் கட்சியில் சேர்க்க முடியாது. எத்தனையோ தடவை சொல்லிட்டேன். டெல்லிலையும் நான் சொல்லிட்டேன்' என அமித் ஷாவை சந்தித்த பிறகு டெல்லி விமானநிலையத்தில் கறாராக பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. டெல்லி சந்திப்பில் நடந்தது என்ன? அதன்வழி எடப்பாடிக்கு உருவாகியிருக்கும் சவால்கள் என்னென்ன?

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா

கடந்த வாரத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்தார். இரண்டு நாட்களாக தமிழகத்தில் முகாமிட்டிருந்த அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி அமித் ஷாவிடம் அப்பாய்ண்ட்மெண்டே வாங்கவில்லை.

சேலம், கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டங்களை காரணம் காட்டி சந்திப்பை தவிர்த்துவிட்டார். எதிர்பார்த்த சந்திப்பு நிகழாததால் அப்செட்டாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா. இந்த விஷயம் எடப்பாடி தரப்புக்கு சொல்லப்பட்ட பிறகுதான், உடனடியாக விமானம் ஏறி டெல்லி பறந்திருக்கிறார் எடப்பாடி.

நேற்றிரவும் 9:30 மணிக்கு மேல் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசானி கூட்டணி குறித்து சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார். அதிமுகவுக்குள் சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோரின் எதிர்பார்ப்புகள் என்னவென்பதை எடப்பாடியிடம் அமித் ஷா கூறியதாக சொல்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்டுக் கொண்ட எடப்பாடி ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி மூவரையும் கட்சிக்குள் மட்டுமே சேர்க்கவே மாட்டேன் என உறுதியாக கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்துதான் பத்திரிகையாளர் சந்திப்பிலும், 'எத்தனை தடவை இதையே கேட்டு, கட்சி பலவீனமா இருக்குற மாதிரியே தோற்றத்தை உருவாக்குவீங்க' என சீறியிருக்கிறார்.

இந்த மாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருக்கிறார். அதற்குள் கூட்டணியை உருவாக்கி கூட்டணி கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் பிரசார மேடையில் ஏற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம் என்கின்றனர். அதற்கு மேலும் தாமதப்படுத்தினால் கூட்டணியை கூட அமைக்க முடியவில்லை என்கிற விமர்சனம் மேலெழுந்து பின்னடைவை கொடுக்கும் என நினைக்கின்றனர். இதை மனதில் வைத்துதான் அப்பா - மகன் சண்டை ஓயாவிடிலும் அன்புமணியை அழைத்து கைகுலுக்கி கூட்டணியில் சேர்த்திருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி - அன்புமணி
எடப்பாடி - அன்புமணி

ஆனால், பிரதமர் வருவதற்குள் கூட்டணியை இறுதி செய்வதில் எடப்பாடிக்கும் தமிழக பாஜகவுக்கும் நிறைய சவால்கள் இருக்கிறது. அன்புமணி காலையில் க்ரீன்வேஸ் சாலையில் எடப்பாடியோடு கூட்டணியை உறுதி செய்கிறார். 'அன்புமணியை பாமகவின் தலைவர் என குறிப்பிட்டதே சட்டவிரோதமானது' என மதியமே எடப்பாடிக்கு எதிராக அறிக்கை விடுகிறார் ராமதாஸ்.

'தந்தைக்கு துரோகம் செய்தவனுக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?' என பத்திரிகையாளர்களை அழைத்து அன்புமணியையும் கிழித்து தொங்கவிடுகிறார். ராமதாஸ் இல்லாமல் வட மாவட்டங்களில் என்.டி.ஏ கூட்டணியால் எதிர்பார்க்கும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால், மகனுக்கு எதிரான யுத்தத்தில் அவர் இறங்கி வருவதாகவே தெரியவில்லை.

இன்னொரு பக்கம் பிரேமலதாவும் எந்தப் பக்கமும் பிடிகொடுக்காமல் கபடி ஆடிக்கொண்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்யசபா சீட் உட்பட உறுதியளிக்கப்பட்ட சில விஷயங்கள் தேமுதிகவுக்கு கிடைக்கவில்லை. அதனால் இந்த முறை தங்களுக்கு தேவையானவற்றுக்கு வலுவான பிடியை ஏற்படுத்திக் கொண்டே கூட்டணியை உறுதி செய்யும் மனநிலையில் இருக்கிறார் பிரேமலதா. அதனால்தான் திமுகவுக்கு எதிராகவும் பெரிதாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் காத்திருக்கிறார்.

பிரேமலதா
பிரேமலதா

நாளை கடலூரில் மாநாடு கூட்டியிருக்கிறார். மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக கூறியிருந்தார். எதிர்பார்க்கும் விஷயங்களுக்கான உறுதி அதிமுகவிடமிருந்து கிடைக்கவில்லையெனில், கடலூரிலும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் பொத்தாம் பொதுவாகவும் பேசிவிட்டு செல்ல வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் முரசு கட்சியினர்.

ஓ.பி.எஸ், டிடிவியை முதலில் கூட்டணியில் இணைக்க வேண்டும். எடப்பாடியின் தலைமையை ஏற்க முடியாது என்கிறார் ஓ.பி.எஸ். அரசியலில் நட்பு, துரோகம் எல்லாம் பார்க்க முடியாது என்றாலும் சீட்டுகளை பார்த்துதான் ஆக வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறார் டிடிவி. அதனால்தான் கௌரவமான இடங்களும் ஆட்சியில் பங்கும் தருபவர்களுடன் தான் கூட்டணி என அறிவித்திருக்கிறார் டிடிவி. இவர்கள் போக இன்னும் கிருஷ்ணசாமியையும் ஜான் பாண்டியனையும் மேடை ஏற்ற வேண்டும். எல்லாம் ஜனவரி இறுதியில் மோடியின் தமிழக வருகைக்குள் நடக்க வேண்டும். இதுதான் எடப்பாடிக்கான இமாலயச் சவால்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவை கழட்டி விட்ட சமயத்திலிருந்தே மெகா கூட்டணி...மெகா கூட்டணி என சவுண்ட் மட்டுமே கொடுத்து வருகிறார் எடப்பாடி. அவர் சொல்லும் மெகா கூட்டணி 2026 தேர்தலை முன்னிட்டு அமையவில்லையெனில், அது அதிமுகவில் எடப்பாடியின் தலைமை மீதே பெரும் கேள்வியை எழுப்பக்கூடிய விஷயமாக மாறும்.!

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க